நான் கார்த்தியின் தீவிர ரசிகை : கிர்த்தி ஷெட்டி | இன்னும் 50 நாள் : பராசக்தி புதிய போஸ்டர் வெளியீடு | ஆர்யன் படம் வருகிற 28-ல் நெட்பிளிக்சில் வெளியாகிறது | ஜாய் கிறிஸ்டில்லாவுக்கு எதிராக மாதம்பட்டி ரங்கராஜ் தொடுத்த வழக்கை தள்ளுபடி செய்த நீதிமன்றம் | சிம்பு கதையில் ரஜினியா... | ஆண் பாவத்திற்கு பொல்லாதது பின் தமிழ் சினிமா நிலைமை பாவம் | அது நானில்லை : ரகுல் ப்ரீத் சிங் எச்சரிக்கை | தன் பட பூஜையை அர்ஜூன் தாஸ் புறக்கணித்தாரா? | தமிழில் மெலோடி பாடல்கள் குறைந்தது ஏன்?: கங்கை அமரன் | ஹிந்தியில் மீண்டும் தடம் பதிப்பாரா தனுஷ்? |

நடிகர் ரஜினிகாந்த் தன்னை ஒரு ஆன்மிகவாதியாக வெளிப்படுத்திக் கொண்டு வருவதோடு, அவ்வப்போது இமயமலைக்கு சென்று பாபாஜியை வணங்கிவிட்டு வருவார். இதன் காரணமாகவே அவரை சோசியல் மீடியாவில் சங்கி என்று பலரும் விமர்சனம் செய்து வருகிறார்கள். இந்த நிலையில்தான், லால் சலாம் படத்தின் இசை விழாவில் அப்படத்தின் இயக்குனரான ஐஸ்வர்யா ரஜினி, என் தந்தை சங்கி இல்லை என்று ஒரு விளக்கம் கொடுத்திருந்தார்.
இந்த நிலையில் ஏ.ஆர்.ரஹ்மான் வெளியிட்டுள்ள ஒரு செய்தியில், ரஜினிகாந்தை ஒரு குறிப்பிட்ட மதத்தைச் சார்ந்தவராக சித்தரிக்க முடியாது. அவர் மத நல்லிணக்கத்தை பேசக்கூடியவர். பிரச்னைகளுக்கு குரல் கொடுப்பவர். அவர் ஒரு மிகப்பெரிய ஸ்டைல் ஐகான். கருப்பாக இருப்பவர்களும் சூப்பர் ஸ்டாராக வர முடியும் என்பதை நிரூபித்துக் காட்டியவர். அதுமட்டுமின்றி ஆன்மிகத்தையும் சினிமா வாழ்க்கையும் தனித்தனியே பார்க்க கூடியவர் என்று தெரிவித்திருக்கிறார் ஏ.ஆர்.ரஹ்மான்.