‛படையப்பா' ரீ-ரிலீஸாகிறது : ரஜினியை சந்தித்து பேசிய பிஎல் தேனப்பன் | அஜித்தின் ‛குட் பேட் அக்லி' முதல் பார்வை வெளியீடு - எதிர்பாராததை எதிர்பாருங்கள் | விஜய், தனுஷை தொடர்ந்து சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாகும் ராஷ்மிகா | தீபாவளியை குறிவைக்கும் கங்குவா படக்குழு | ஸ்ரீ கணேஷ் இயக்கத்தில் சித்தார்த் | ராஜமவுலி - மகேஷ்பாபு பட தயாரிப்பு நிறுவனம் வெளியிட்ட திடீர் அறிவிப்பு | வளரும் நடிகர் பட்டியலில் இணைந்த கவின் | மிஸ்டர் அண்ட் மிஸஸ் படத்தில் ஜோடி சேரும் ராபர்ட் மாஸ்டர் - வனிதா விஜயகுமார் | ஆரம்பமே ஹீரோயின் : அசத்தும் தேஜூ அஸ்வினி | மோடி பயோபிக் படத்தில் நடிப்பது உண்மையா? - சத்யராஜ் தந்த விளக்கம் |
தனுஷ் நடிப்பில் ‛கேப்டன் மில்லர்' படம் பொங்கலுக்கு ரிலீஸானது. தற்போது சேகர் கம்முலா இயக்கத்தில் தனது 51வது படத்தில் நடித்து வருகிறார். இதில் ராஷ்மிகா, நாகார்ஜூனா ஆகியோரும் முதன்மை வேடங்களில் நடிக்கின்றனர். இதன் படப்பிடிப்பு திருப்பதி, அலிபிரி பகுதியில் நடக்கிறது. அந்த பகுதியில் திடீரென போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டது. மேலும் கடும் வாகன நெரிசலும் ஏற்பட்டது. இதனால் அந்த பகுதியில் லேசான சலசலப்பு ஏற்பட்டது. பொதுமக்கள் கடும் அவதிக்கு உள்ளாகினர். இதை சீர்செய்யும் பணியில் போலீசார் ஈடுபட்டனர். படப்பிடிப்புக்கு அனுமதி பெற்றிருந்தனர். ஆனால் போக்குவரத்து மாற்றம் குறித்து போலீசார் முன்கூட்டியே அறிவிக்காததால் பொதுமக்கள் பாதிக்கப்பட்டனர். அதேசமயம், கோயில் செல்லும் பாதையில் இப்படி படப்பிடிப்பு நடத்தி பொதுமக்களுக்கு இடையூறு செய்யலாமா என பக்தர்கள் கேள்வி எழுப்பி உள்ளனர்.