இன்னும் 50 நாள் : பராசக்தி புதிய போஸ்டர் வெளியீடு | ஆர்யன் படம் வருகிற 28-ல் நெட்பிளிக்சில் வெளியாகிறது | ஜாய் கிறிஸ்டில்லாவுக்கு எதிராக மாதம்பட்டி ரங்கராஜ் தொடுத்த வழக்கை தள்ளுபடி செய்த நீதிமன்றம் | சிம்பு கதையில் ரஜினியா... | ஆண் பாவத்திற்கு பொல்லாதது பின் தமிழ் சினிமா நிலைமை பாவம் | அது நானில்லை : ரகுல் ப்ரீத் சிங் எச்சரிக்கை | தன் பட பூஜையை அர்ஜூன் தாஸ் புறக்கணித்தாரா? | தமிழில் மெலோடி பாடல்கள் குறைந்தது ஏன்?: கங்கை அமரன் | ஹிந்தியில் மீண்டும் தடம் பதிப்பாரா தனுஷ்? | பிளாஷ்பேக்: உண்ணாவிரதம் இருந்து வெள்ளித்திரையின் உச்சம் தொட்ட பி யூ சின்னப்பா |

ஜெய்பீம் பட இயக்குனர் தா.சே.ஞானவேல் இயக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த் 'வேட்டையன்' என்கிற படத்தில் நடித்து வருகிறார். இதில் அமிதாப் பச்சன், பஹத் பாசில், ராணா டகுபதி, மஞ்சு வாரியர், ரித்திகா சிங், துஷரா விஜயன் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். லைகா புரொடக்சன்ஸ் தயாரிக்கும் இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார்.
ஏற்கனவே இதன் படப்பிடிப்பு திருநெல்வேலி, திருவனந்தபுரம், மும்பை ஆகிய பகுதிகளில் நடைபெற்று வந்தது. தொடர்ந்து கடந்த ஒரு சில வாரங்களாக இதன் படப்பிடிப்பிற்கு பிரேக் விட்டிருந்தனர். இப்போது வேட்டையன் படப்பிடிப்பு இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. இதன் படப்பிடிப்பு ஆந்திராவில் உள்ள கடப்பா பகுதியில் இன்று தொடங்கியுள்ளனர். இதில் பஹத் பாசில், ராணா டகுபதி இருவரும் சம்மந்தப்பட்ட காட்சிகளை படமாக்கி வருகின்றனர்.