ஆண் பாவத்திற்கு பொல்லாதது பின் தமிழ் சினிமா நிலைமை பாவம் | அது நானில்லை : ரகுல் ப்ரீத் சிங் எச்சரிக்கை | தன் பட பூஜையை அர்ஜூன் தாஸ் புறக்கணித்தாரா? | தமிழில் மெலோடி பாடல்கள் குறைந்தது ஏன்?: கங்கை அமரன் | ஹிந்தியில் மீண்டும் தடம் பதிப்பாரா தனுஷ்? | பிளாஷ்பேக்: உண்ணாவிரதம் இருந்து வெள்ளித்திரையின் உச்சம் தொட்ட பி யூ சின்னப்பா | 4 ஆண்டுகளை நிறைவு செய்த 'மாநாடு' | உங்கள் அறிவுரை தேவைப்படும்போது பெற்றுக் கொள்கிறேன் : ரசிகருக்கு சமந்தா பதில் | தெலுங்கு படமாக இருந்தாலும் கன்னடத்துக்கு முக்கியத்துவம் வேண்டும் : உபேந்திரா | கோவா திரைப்பட விழாவில் சென்னை மாணவியின் ஏஐ படம் |

நடிகர் பிரித்விராஜ் இயக்குனராக மாறிய பிறகு அவர் நடிக்கும் படங்களின் எண்ணிக்கை வழக்கத்திற்கு மாறாக குறைந்துவிட்டது. அந்த வகையில் ஒரு சிறிய இடைவெளிக்குப் பிறகு சமீபத்தில் பிரபாஸ் உடன் அவர் இணைந்து நடித்த சலார் திரைப்படம் வெளியானது. இதனை தொடர்ந்து தற்போது மோகன்லாலை வைத்து லூசிபர் படத்தின் இரண்டாம் பாகத்தை இயக்கி வருகிறார். இதற்கு முன்னதாக அவர் கடந்த சில வருடங்களாகவே தனது கடும் உழைப்பை கொடுத்து நடித்துள்ள ஆடு ஜீவிதம் திரைப்படம் ஒரு வழியாக வரும் ஏப்ரல் பத்தாம் தேதி ரிலீஸ் ஆக இருக்கிறது.
இந்த நிலையில் சலார் படத்தில் நடித்த சமயத்திலேயே பாலிவுட்டில் அக்ஷய் குமாருடன் இணைந்து படே மியான் சோட்டே மியான் என்கிற படத்தில் வில்லனாக நடித்து வந்தார் பிரித்விராஜ். தற்போது இந்த படமும் ரிலீஸுக்கு தயாராகியுள்ளதுடன் ஆடு ஜீவிதம் வெளியாகும் அதே ஏப்ரல் பத்தாம் தேதி தான் ரிலீஸ் ஆக இருக்கிறது. இந்த இரண்டு படங்களிலும் பிரித்விராஜின் மாறுபட்ட நடிப்பை பார்ப்பதற்கு ரசிகர்கள் ஆவலாக இருக்கிறார்கள்.