ஒரே மாதத்தில் திரைக்கு வரும் கிர்த்தி ஷெட்டியின் மூன்று படங்கள் | 100 பேர் வந்தாலும்....! பிரதீப் ரங்கநாதனின் 'டியூட்' படத்தின் டிரைலர் வெளியானது! | ஆனந்த்.எல்.ராய் இயக்கத்தில் இணையும் முன்னனி நடிகைகள் | இம்மாதத்தில் ஓடிடியில் வெளியாகும் 'லோகா, இட்லிகடை' | 500 கோடி வசூலை நோக்கி 'காந்தாரா சாப்டர் 1' | அரசன் படத்தின் புதிய அப்டேட் : சுதீப் இணைய வாய்ப்பு | சிவகார்த்திகேயன் உடன் இணையும் ஸ்ரீ லீலா | பைசன் படத்தின் தணிக்கை சான்று மற்றும் ‛ரன்னிங் டைம்' | நான் அசாம், தாய்மொழி நேபாளம் : கயாடு லோகர் புது தகவல் | பாபாஜி குகையில் ரஜினி தியானம், வழிபாடு |
நடிகர் பிரித்விராஜ் இயக்குனராக மாறிய பிறகு அவர் நடிக்கும் படங்களின் எண்ணிக்கை வழக்கத்திற்கு மாறாக குறைந்துவிட்டது. அந்த வகையில் ஒரு சிறிய இடைவெளிக்குப் பிறகு சமீபத்தில் பிரபாஸ் உடன் அவர் இணைந்து நடித்த சலார் திரைப்படம் வெளியானது. இதனை தொடர்ந்து தற்போது மோகன்லாலை வைத்து லூசிபர் படத்தின் இரண்டாம் பாகத்தை இயக்கி வருகிறார். இதற்கு முன்னதாக அவர் கடந்த சில வருடங்களாகவே தனது கடும் உழைப்பை கொடுத்து நடித்துள்ள ஆடு ஜீவிதம் திரைப்படம் ஒரு வழியாக வரும் ஏப்ரல் பத்தாம் தேதி ரிலீஸ் ஆக இருக்கிறது.
இந்த நிலையில் சலார் படத்தில் நடித்த சமயத்திலேயே பாலிவுட்டில் அக்ஷய் குமாருடன் இணைந்து படே மியான் சோட்டே மியான் என்கிற படத்தில் வில்லனாக நடித்து வந்தார் பிரித்விராஜ். தற்போது இந்த படமும் ரிலீஸுக்கு தயாராகியுள்ளதுடன் ஆடு ஜீவிதம் வெளியாகும் அதே ஏப்ரல் பத்தாம் தேதி தான் ரிலீஸ் ஆக இருக்கிறது. இந்த இரண்டு படங்களிலும் பிரித்விராஜின் மாறுபட்ட நடிப்பை பார்ப்பதற்கு ரசிகர்கள் ஆவலாக இருக்கிறார்கள்.