மோகன்லாலின் ஹிருதயபூர்வம் படத்துக்கு யு சான்றிதழ் | ‛காஞ்சனா 4' படத்திற்கு பிறகு தமிழ் சினிமாவில் என்னை தேடுவார்கள் : நோரா பதேஹி | ‛கஜினி' சிக்ஸ்பேக்கிற்கு அஜித் தான் காரணம் : ஏ.ஆர்.முருகதாஸ் தகவல் | சன்னி லியோன் நடித்த படத்தின் மூன்றாம் பாகத்தில் தமன்னா | ஜனநாயகன் இசை விழாவில் கலந்து கொள்ள ரஜினி, கமலுக்கு அழைப்பா? | '18 மைல்ஸ் தாரணா' : ‛பேச்சுலர்' இயக்குனரின் அடுத்த பட அப்டேட் | ராஜமவுலி, மகேஷ்பாபு படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிடும் ஜேம்ஸ் கேமரூன் | ‛ஆந்திரா கிங் தாலுக்' படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு! | விநாயகர் சதுர்த்தி படங்கள் வருவது சந்தேகம்? | 'மெட்ராஸ் மேட்னி' குழுவினரை அழைத்துப் பாராட்டிய சிவகார்த்திகேயன் |
விஜய் நடித்த “துள்ளாத மனமும் துள்ளும்” படம் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் எஸ்.எழில். தொடர்ந்து, அஜித் நடித்த “பூவெல்லாம் உன் வாசம்”, “ராஜா” , சிவகார்த்திக்கேயன் நடித்த “மனம் கொத்திப் பறவை”, பிரபுதேவா, சரத்குமார் நடித்த “பெண்ணின் மனதை தொட்டு”, ஜெயம் ரவி, பாவனா நடித்த “தீபாவளி”, விமல், பிந்து மாதவி நடித்த “தேசிங்குராஜா”, விக்ரம் பிரபு நடித்த “வெள்ளக்காரதுரை”, விஷ்ணு விஷால் நடித்த “வேலைன்னு வந்துட்டா வெள்ளக்காரன்”, உதயநிதி நடித்த “சரவணன் இருக்க பயமேன்”, கவுதம் கார்த்திக்-பார்த்திபன் நடித்த “யுத்த சத்தம்” உள்ளிட்ட பல படங்களை இயக்கினார். தற்போது விமல் நடிக்க “தேசிங்குராஜா-2” படத்தை இயக்கி வருகிறார்.
எழில் இயக்கிய 'துள்ளாத மனமும் துள்ளும்' படம் வெளியாகி 25 ஆண்டுகள் ஆனதையொட்டி அதனை 'தேசிங்கு ராஜா 2' படத்தின் தயாரிப்பாளர் பி.ரவிசந்திரன் விழா நடத்தி கொண்டாடுகிறார். இந்தவிழா வருகிற 27ம் தேதி ஏவிஎம் ஸ்டூடியோவில் நடக்கிறது. எழில் படங்களின் தயாரிப்பாளர்கள், அவரது படத்தில் நடித்த நடிகர், நடிகைகள் கலந்து கொள்கிறார்கள். எழிலை அறிமுகப்படுத்திய சூப்பர் குட் பிலிம்ஸ் ஆர்.பி.சவுத்திரி துவக்கி வைக்கிறார். எழில் படத்தில் நடித்த விஜய், அஜித், சிவகார்த்திகேயனுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.