மோகன்லாலின் ஹிருதயபூர்வம் படத்துக்கு யு சான்றிதழ் | ‛காஞ்சனா 4' படத்திற்கு பிறகு தமிழ் சினிமாவில் என்னை தேடுவார்கள் : நோரா பதேஹி | ‛கஜினி' சிக்ஸ்பேக்கிற்கு அஜித் தான் காரணம் : ஏ.ஆர்.முருகதாஸ் தகவல் | சன்னி லியோன் நடித்த படத்தின் மூன்றாம் பாகத்தில் தமன்னா | ஜனநாயகன் இசை விழாவில் கலந்து கொள்ள ரஜினி, கமலுக்கு அழைப்பா? | '18 மைல்ஸ் தாரணா' : ‛பேச்சுலர்' இயக்குனரின் அடுத்த பட அப்டேட் | ராஜமவுலி, மகேஷ்பாபு படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிடும் ஜேம்ஸ் கேமரூன் | ‛ஆந்திரா கிங் தாலுக்' படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு! | விநாயகர் சதுர்த்தி படங்கள் வருவது சந்தேகம்? | 'மெட்ராஸ் மேட்னி' குழுவினரை அழைத்துப் பாராட்டிய சிவகார்த்திகேயன் |
மலையாள சினிமாவின் முன்னணி நடிகரான சுரேஷ் கோபி பரபரப்புக்கு பஞ்சமில்லாதவர். அடிக்கடி சர்ச்சைகளில் சிக்குவார். அந்த வகையில் கடந்த சில வாரங்களுக்கு முன்பு கோழிக்கோட்டில் பத்திரிகையாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பெண் பத்திரிகையாளர் தோளில் கையை வைத்து தவறாக நடந்ததாக கூறப்பட்டது. அதன்பிறகு சுரேஷ் கோபி “நான் தவறாக நடக்கவில்லை. நான் கடந்து செல்ல வசதியாக அவரது தோளை பிடித்து விலக்கி விட்டேன். அவர் என் மகள் போன்றவர். தவறாக கருதினால் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன்”. என்று தன்னிலை விளக்கம் அளித்தார்.
என்றாலும் சம்பந்தப்பட்ட பெண் பத்திரிகையாளர் இதுபற்றி கோழிக்கோடு நடக்காவு போலீசில் புகார் கொடுத்தார். அதன்பேரில் சுரேஷ் கோபி மீது ஜாமீனில் வெளிவர முடியாத பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இதற்கிடையே சுரேஷ் கோபியின் மகள் திருமணம் வருகிற 17ம் தேதி நடைபெறுகிறது. இதனால் அவர் முன் ஜாமீன் கோரி கேரள உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இந்த மனுவை விசாரித்த நீதிமன்றம், இதுகுறித்து மாநில அரசு தனது கருத்தினை தெரிவிக்க வேண்டும் என கூறியிருந்தது. இதை தொடர்ந்து இந்த வழக்கில் சுரேஷ் கோபியை கைது செய்யப்போவதில்லை, என்று உயர்நீதிமன்றத்தில் தெரிவித்தது கேரள மாநில அரசு. இதனால் சுரேஷ் கோபிக்கு முன் ஜாமீன் வழங்கி நீதிமன்றம் உத்தரவிட்டது.