திரையுலகில் 22 ஆண்டுகள்: நயன்தாரா நெகிழ்ச்சி | துல்கர் சல்மானுக்கு ஜோடியாக நடிக்க 3 கோடி சம்பளம் வாங்கிய பூஜா ஹெக்டே! | புகழ்ச்சியை தலையில் ஏற்றிக் கொள்ள மாட்டேன்! : கல்யாணி பிரியதர்ஷன் | விஜய்யின் தந்தை இயக்குனர் எஸ்.ஏ.சி.,யை டென்ஷன் ஆக்கிய கேள்வி! | திருமணம் செய்து கொள்ளாமல் இரட்டை குழந்தை பெற்றெடுத்த நடிகை பாவனா ரமண்ணா! | சிம்புவின் ‛அரசன்' படத்தில் இடம் பெறும் மூன்று முன்னணி நடிகைகள்! | அடூர் கோபாலகிருஷ்ணன் படத்தில் நடிக்காததால் தான் மோகன்லால் சூப்பர் ஸ்டார் ஆனார் ; குணச்சித்திர நடிகர் கிண்டல் | துல்கர் சல்மான் கார் பறிமுதல் விவகாரம் ; சுங்கத்துறைக்கு நீதிமன்றம் சரமாரி கேள்வி | நாகார்ஜுனாவின் 100வது படத்தில் இணையும் நாகசைதன்யா - அகில் | இந்திய ராணுவ தலைமை தளபதி ஜெனரலை சந்தித்த மோகன்லால் |
சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி பின்னர் முன்னணி கதாநாயகியாக வலம் வந்தவர் மீனா. தமிழ், தெலுங்கு, மலையாளத்தில் ஏராளமான படங்களில் நடித்துள்ள மீனா, கடந்த 40 ஆண்டுகளாக தொடர்ந்து நடித்து வருகிறார். 2009ஆம் ஆண்டு வித்யாசாகர் என்பவரை திருமணம் செய்து கொண்ட மீனாவுக்கு நைனிகா என்ற மகள் இருக்கிறார். இவர் தெறி படத்தில் விஜய்யுடன் நடித்திருந்தார்.
கடந்த 2022ம் ஆண்டு நுரையீரல் தொற்று காரணமாக மீனாவின் கணவர் மறைந்து விட்டார். பின்னர் அதில் இருந்து மீண்டு வந்து தற்போது தமிழில் ரவுடி பேபி, மலையாளத்தில் ஆனந்தபுரம் டைரி போன்ற படங்களில் நடித்து வருகிறார் மீனா. இந்த நிலையில் மீனா இரண்டாவது திருமணம் செய்து கொள்ள தயாராகி வருவதாக தொடர்ந்து ஊடகங்களில் ஒரு செய்தி பரவிக் கொண்டிருக்கிறது.
இதுபற்றி ஒரு பேட்டியில் அவரிடத்தில் கேட்கப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கையில், ஒரு ஹீரோ இதுபோன்று மறுமணம் செய்யாமல் இருந்தால் அவரைப் பற்றி எந்த வதந்திகளும் வெளிவருவதில்லை. அதுவே ஒரு ஹீரோயின் கணவரை இழந்து தனியாக இருந்தால் மட்டும் இது போன்ற கீழ்த்தரமான செய்திகளை வெளியிட்டு வருகிறார்கள். எத்தனையோ பெண்கள் கணவரை இழந்தும் தனியாக வாழ முடியும் என்பதை நிரூபித்து காட்டி வருகிறார்கள். அதனால் நானும் இரண்டாவது திருமணத்தை பற்றி யோசிக்காமல் எனது மகள் நைனிகாவுக்காக வாழ்ந்து கொண்டிருக்கிறேன். எப்போதுமே எனது வாழ்வில் இன்னொரு திருமணம் என்ற பேச்சுக்கே இடமில்லை என்று சொல்லி தன்னைப்பற்றி வெளியாகிவரும் வதந்திக்கு ஒரு முற்றுப்புள்ளி வைத்துள்ளார் மீனா.