ஒரே மாதத்தில் திரைக்கு வரும் கிர்த்தி ஷெட்டியின் மூன்று படங்கள் | 100 பேர் வந்தாலும்....! பிரதீப் ரங்கநாதனின் 'டியூட்' படத்தின் டிரைலர் வெளியானது! | ஆனந்த்.எல்.ராய் இயக்கத்தில் இணையும் முன்னனி நடிகைகள் | இம்மாதத்தில் ஓடிடியில் வெளியாகும் 'லோகா, இட்லிகடை' | 500 கோடி வசூலை நோக்கி 'காந்தாரா சாப்டர் 1' | அரசன் படத்தின் புதிய அப்டேட் : சுதீப் இணைய வாய்ப்பு | சிவகார்த்திகேயன் உடன் இணையும் ஸ்ரீ லீலா | பைசன் படத்தின் தணிக்கை சான்று மற்றும் ‛ரன்னிங் டைம்' | நான் அசாம், தாய்மொழி நேபாளம் : கயாடு லோகர் புது தகவல் | பாபாஜி குகையில் ரஜினி தியானம், வழிபாடு |
மலையாள திரையுலகில் சீனியர் இயக்குனர்களில் முக்கியமானவர் சத்யன் அந்திக்காடு. அவரது மகன்களான அனூப் சத்யன், துல்கர் சல்மான் நடித்த வரனே ஆவிஷ்யமுண்டு படம் மூலமாகவும், அகில் சத்யன் பஹத் பாஸில் நடித்த பாச்சுவும் அற்புத விளக்கும் படம் மூலமாகவும் இயக்குனர்களாக அறிமுகமானவர்கள். இந்த நிலையில் அகில் சத்யன் அடுத்ததாக நிவின்பாலி நடிக்கும் ஒரு பேண்டஸி ஹாரர் படத்தை இயக்க இருக்கிறார். இந்த படத்தில் ஒரு பேயும் முக்கிய கதாபாத்திரத்தில் இடம் பெறுகிறது.
இதுபற்றி அவர் கூறும்போது, “இந்த படத்திற்கான கதையை உருவாக்க ஒரு வருடத்திற்கு முன்பே வேலையை துவங்கி விட்டேன். ஆனால் எனக்கும் நிவின்பாலிக்கும் பேய் என்றாலே பயம். அதனால் என்னை நானே பயமாக கூடாது என்பதற்காக பகலில் மட்டுமே இந்த படத்தின் கதையை எழுதினேன். இது வெறும் ஹாரர் படம் மட்டுமல்ல.. பேண்டஸி படமும் கூட..” என்று கூறியுள்ளார் அகில் சத்யன்.