சூர்யா படத்துக்கு இசையமைக்கும் சந்தோஷ் நாராயணன் | இப்போதும் நான் தான் வீட்டிற்கு பால் வாங்கி வருகிறேன் : பஹத் பாசில் | 'கருடன்' படத்திற்கு வியாபார வட்டத்தில் வரவேற்பு | அக்கா வேடத்தில் நடிக்க நயன்தாராவுக்கு இவ்வளவு சம்பளமா? | 'ஸ்டார்' படம் முதல் நாள் வசூல் எவ்வளவு ? | 'பாகுபலி 3' போன்று 'கேஜிஎப் 3' பற்றியும் வெளியான புதிய தகவல் | தெலுங்கு படங்களில் நடிப்பதில் உள்ள சங்கடம் இதுதான் : சம்யுக்தா | என்டிஆருக்கு பாரதரத்னா : சிரஞ்சீவி விருப்பம் | 'தி கோட்' - அமெரிக்கா புறப்பட்ட விஜய் | மே 31ல் திரைக்கு வரும் கருடன் திரைப்படம் |
மலையாள திரையுலகில் சீனியர் இயக்குனர்களில் முக்கியமானவர் சத்யன் அந்திக்காடு. அவரது மகன்களான அனூப் சத்யன், துல்கர் சல்மான் நடித்த வரனே ஆவிஷ்யமுண்டு படம் மூலமாகவும், அகில் சத்யன் பஹத் பாஸில் நடித்த பாச்சுவும் அற்புத விளக்கும் படம் மூலமாகவும் இயக்குனர்களாக அறிமுகமானவர்கள். இந்த நிலையில் அகில் சத்யன் அடுத்ததாக நிவின்பாலி நடிக்கும் ஒரு பேண்டஸி ஹாரர் படத்தை இயக்க இருக்கிறார். இந்த படத்தில் ஒரு பேயும் முக்கிய கதாபாத்திரத்தில் இடம் பெறுகிறது.
இதுபற்றி அவர் கூறும்போது, “இந்த படத்திற்கான கதையை உருவாக்க ஒரு வருடத்திற்கு முன்பே வேலையை துவங்கி விட்டேன். ஆனால் எனக்கும் நிவின்பாலிக்கும் பேய் என்றாலே பயம். அதனால் என்னை நானே பயமாக கூடாது என்பதற்காக பகலில் மட்டுமே இந்த படத்தின் கதையை எழுதினேன். இது வெறும் ஹாரர் படம் மட்டுமல்ல.. பேண்டஸி படமும் கூட..” என்று கூறியுள்ளார் அகில் சத்யன்.