நாங்கள் பிரிகிறோம் : ஜிவி பிரகாஷ் - சைந்தவி அறிவிப்பு | ஸ்டார் படத்தின் முதல்வார வசூல் நிலவரம் இதோ | பத்து நாளில் 55 கோடி வசூலித்த அரண்மனை 4 | திரிஷாவின் ஐடென்டிட்டி படப்பிடிப்பு நிறைவு | நடிகர் சங்கத்திற்கு தனுஷ் ரூ.1 கோடி நிதி | மே 17 ரிலீஸ் : இந்த வாரமும் மக்கள் தியேட்டர்களுக்கு வருவார்களா? | நான் எந்தக் கட்சியும் சாராதவன் - அல்லு அர்ஜுன் விளக்கம் | மீண்டும் தமிழுக்கு வரும் திகங்கனா சூரியவன்ஷி | சினிமாவில் தொடர்ந்து நடிக்காதது ஏன் : மோகன் விளக்கம் | தமிழில் வெளியாகும் 'டபுள் ஐ-ஸ்மார்ட்' |
நடிகர் தனுஷ் தற்போது தனது அக்கா மகனை வைத்து மூன்றாவது படத்தை இயக்கி வருகிறார். இதற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கிறார். இதில் அனிகா சுரேந்திரன், சரத்குமார் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். இப்போது இதன் படப்பிடிப்பு சென்னையில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. குறுகிய நாட்களில் இதன் படப்பிடிப்பை முடிக்க திட்டமிட்டுள்ளனர்.
இந்த படத்தில் ஒளிப்பதிவாளர் ஆக சமீபத்தில் வெளிவந்த 'பைட் கிளப்' பட ஒளிப்பதிவாளர் லியோன் பிரிட்டோ ஒப்பந்தம் ஆகியுள்ளதாக கூறப்படுகிறது. இவர் பொன்னியின் செல்வன் 1ம் பாகத்தில் உதவி ஒளிப்பதிவாளர் ஆக பணியாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது.