கேன்ஸ் திரைப்பட விழாவில் தமிழ் படம் | முதன்முறையாக இமான் இசையில் பின்னணி பாடிய மனோ | பாகுபலி 3ம் பாகம் உருவாகும் : உறுதிப்படுத்திய ராஜமவுலி | மலையாள இயக்குனர் சங்கீத் சிவன் காலமானார் | உலகில் புடவையை விட சிறந்த ஆடையில்லை - ஆலியா பட் | கல்கி 2898 ஏ.டி படத்தில் மகேஷ் பாபு? | அமிதாப் பச்சனுக்கு அடுத்து எனக்கு தான் : கங்கனா பெருமிதம் | ‛டிராவல் ஏஜென்ட்' படத்தை துவக்கி வைத்து ஹீரோவை அறிமுகம் செய்த தர்மேந்திரா | எதிர்நீச்சல் சீரியலில் என்ட்ரி கொடுத்த பிரபலம் | நடிகைகளின் பாராட்டு மழையில் மஞ்சும்மேல் பாய்ஸ் |
நடிகர் தனுஷ் தனது 50வது படத்தை இயக்கி, நடித்து வருகிறார். ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கும் இப்படத்தில் எஸ்.ஜே.சூர்யா, சந்தீப் கிஷன், வரலட்சுமி சரத்குமார், அபர்ணா பாலமுரளி, காளிதாஸ் ஜெயராம், துஷரா விஜயன் உள்ளிட்ட பல நட்சத்திர பட்டாளங்கள் இணைந்து நடித்து வருகின்றனர்.
இதன் கதைகளம் வடசென்னை பகுதியைக் சுற்றி என்பதால் இதன் படப்பிடிப்பு கடந்த சில மாதங்களாக சென்னை ஈ.சி.ஆர்-ல் வடசென்னையை பிரமாண்டமான அரங்கமாக அமைத்து படப்பிடிப்பு நடத்தி வந்தனர். இந்த நிலையில் நள்ளிரவில் தனுஷ் தனது எக்ஸ் சமூக வலைதள பக்கத்தில் எனது 50வது படத்தின் படப்பிடிப்பு முழுவதும் முடிவடைந்தது. படக்குழுவினர்களுக்கு மற்றும் தயாரிப்பாளருக்கு நன்றி என பதிவிட்டுள்ளார்.