எலெக்ஷனால் தள்ளிப்போகும் 'எமெர்ஜென்சி' | 'மெட்டிஒலி' சாந்திக்கு நிஜத்திலும் மருமகளாகும் சந்தியா | பட்டியலின பெண்கள் குறித்த ஆடியோ : கார்த்திக் குமார் புகார் | 'கூலி' டீமின் திடீர் பயணங்கள் : அபுதாபி பறந்தார் ரஜினி, சபரிமலை சென்றார் லோகேஷ் | பிளாஷ்பேக் : மது வீழ்த்திய மகா கலைஞன் விஜயன் | மற்றவர்களை கவனிப்பது என் வேலை இல்லை : சிம்பொனியை எழுதியிருப்பதாகவும் இளையராஜா தகவல் | கதைகளை புனைவதால் வருத்தம்: பாடகி சைந்தவி | மீண்டும் அயோத்தி மந்திர மூர்த்தி இயக்கத்தில் நடிக்கும் சசிகுமார்! | 4 மொழிகளில் திரைக்கு வரும் அமலாபாலின் ‛லெவல் கிராஸ்' | இந்தியன்-2 படத்தோடு வெளியாகும் இந்தியன்- 3 படத்தின் டிரைலர்! |
தமிழ் சினிமாவில் இசையமைப்பாளராக அறிமுகமாகி, தயாரிப்பாளராக, நடிகராக உயர்ந்தவர் விஜய் ஆண்டனி. அவருடைய மூத்த மகள் மீரா மூன்று மாதங்களுக்கு முன்பு தற்கொலை செய்து கொண்டார். பள்ளியில் படித்து வந்த மீராவின் மறைவு திரையுலகினருக்கும், ரசிகர்களுக்கும் கடும் அதிர்ச்சியாக இருந்தது.
மறைந்த தனது மகள் பற்றி நேற்று திடீரென உருக்கமான ஒரு பதிவைப் பதிவிட்டுள்ளார் விஜய் ஆண்டனியின் மனைவி பாத்திமா. “மீரா தங்கம், உனது பியானோ உனது தொடுதலுக்காகக் காத்திருக்கிறது, ஏங்குகிறது. நாங்கள் அனைவரும் இன்னும் நம்பாமல் இருக்கிறோம். நீ சீக்கிரம் சென்று விட்டாய் பேபி. இந்த உலகம் உனக்கானதாக இல்லை, ஆனால் அம்மா இங்கே இருக்கிறேன். வாழ்க்கைக்கும், மரணத்திற்கும் இடையிலான கருத்தை என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை. எனக்கு வெறுமை ஆகிவிட்டது. நான் உன்னை சந்திக்கும் வரை நன்றாகச் சாப்பிட்டு மகிழ்ச்சியாக இரு. லாரா உன்னை மிஸ் செய்கிறாள்.
ரொம்ப வலிக்குது, கடவுள் எனக்கு நிச்சயம் உதவுவார். உங்கள் அனைவரின் பிரார்த்தனைக்கும் ஆதரவுக்கும் நன்றி. இந்த துக்கத்தில் இருந்து என்னால் வெளியே வர முடியாது. காலம்தான் குணப்படுத்த வேண்டும், எனக்காக நீங்கள் அனைவரும் இருக்கிறீர்கள்,” என உருக்கமாகப் பதிவிட்டுள்ளார்.
பாத்திமாவின் இந்தப் பதிவிற்கு ரசிகர்களும், பிரபலங்களும் ஆறுதல் தெரிவித்து வருகிறார்கள்.