‛படையப்பா' ரீ-ரிலீஸாகிறது : ரஜினியை சந்தித்து பேசிய பிஎல் தேனப்பன் | அஜித்தின் ‛குட் பேட் அக்லி' முதல் பார்வை வெளியீடு - எதிர்பாராததை எதிர்பாருங்கள் | விஜய், தனுஷை தொடர்ந்து சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாகும் ராஷ்மிகா | தீபாவளியை குறிவைக்கும் கங்குவா படக்குழு | ஸ்ரீ கணேஷ் இயக்கத்தில் சித்தார்த் | ராஜமவுலி - மகேஷ்பாபு பட தயாரிப்பு நிறுவனம் வெளியிட்ட திடீர் அறிவிப்பு | வளரும் நடிகர் பட்டியலில் இணைந்த கவின் | மிஸ்டர் அண்ட் மிஸஸ் படத்தில் ஜோடி சேரும் ராபர்ட் மாஸ்டர் - வனிதா விஜயகுமார் | ஆரம்பமே ஹீரோயின் : அசத்தும் தேஜூ அஸ்வினி | மோடி பயோபிக் படத்தில் நடிப்பது உண்மையா? - சத்யராஜ் தந்த விளக்கம் |
பிரபல சின்னத்திரை நடிகர்களான ரச்சிதாவும், தினேஷும் ஒருவரையொருவர் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். ஆரம்பத்தில் மகிழ்ச்சியான தம்பதிகளாக வாழ்ந்து வந்த இருவரும் ஒருக்கட்டத்தில் தனித்தனியாக பிரிந்து வாழ்ந்து வருகின்றனர். ஒருபுறம் தினேஷ் உருகி உருகி ரச்சிதாவிற்காக குரல் கொடுக்க, ரச்சிதாவோ தினேஷுடன் இனி சேர்ந்து வாழ வாய்ப்பேயில்லை என்றவாறு பேசி வருகிறார்.
இந்நிலையில், இவர்கள் இருவரும் உண்மையில் பிரிந்ததற்கான காரணம் என்னவென்று சோசியல் மீடியாவில் தகவல் உலா வருகிறது. அதாவது நடிப்பதற்கு சான்ஸ் கிடைக்காத சந்தர்ப்பத்தில் தினேஷ் நாச்சியார்புரம் என்ற சீரியலை தயாரித்தார். இதற்காக அவர் பெரிய தொகையை கடனாகவும் வாங்கியுள்ளார். துரதிர்ஷ்டவசமாக நாச்சியார்புரம் சீரியல் பாதியிலேயே நிறுத்தப்பட்டது. இதனால் கடனில் சிக்கித் தவித்த தினேஷ் மீது வழக்குகள் பாய்ந்தது. அதில் தினேஷின் மனைவி ரச்சிதாவின் பெயரையும் இணைத்துவிட்டனர். இதனால் இருவருக்குமிடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இந்த கோபத்தில் தான் ரச்சிதா தினேஷுடன் சண்டைபோட்டு பிரிந்துள்ளதாக சின்னத்திரை வட்டாரங்களிலில் பேச்சு அடிப்பட்டு வருகிறது.