சப்தம் படம் எப்போது ரிலீஸ் | ஆகஸ்ட் மாதத்தில் வெளியாகும் மெய்யழகன் | இனிதே நடந்து முடிந்த மகளின் திருமணம் : அர்ஜூன் வெளியிட்ட நெகிழ்ச்சி பதிவு | விக்ரமும், சிவகார்த்திகேயனும் ஒரேநாளில் மோதிக் கொள்கிறார்களா? | இளையராஜாவால் பதிப்புரிமை கோர முடியாது - நீதிமன்றத்தில் தகவல் | கோட் பட அப்டேட்டை வெளியிட்ட அர்ச்சனா கல்பாத்தி | ராம் படத்திற்காக மோகன்லாலுக்கு ஜேம்ஸ்பாண்ட் பாணியில் எழுதப்பட்ட ஆங்கில பாடல் | பிரேமலு படத்தை இரண்டு முறை பார்த்தேன் : சிலாகிக்கும் விஜய்சேதுபதி | ஆஸ்தான மேக்கப்மேனை தனது அரசு உதவியாளராக மாற்றிய சுரேஷ்கோபி | யுவ ராஜ்குமாருடன் விவாகரத்து ஏன்? - மனைவி வெளியிட்ட அதிர்ச்சி தகவல் |
ராஜா ராணி படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமான அட்லி தொடர்ந்து தெறி, மெர்சல், பிகில் என நடிகர் விஜய்யை வைத்து வெற்றி படங்களை இயக்கினார். சமீபத்தில் பாலிவுட்டில் நடிகர் ஷாரூக்கானை வைத்து 'ஜவான்' படத்தை இயக்கி அங்கும் வெற்றி பெற்றார்.
சமீபத்தில் அளித்த ஒரு பேட்டியில் அஜித்தை வைத்து படம் இயக்குவது குறித்து அட்லி கூறியதாவது, "ராஜா ராணி படத்திற்கு பிறகு நயன்தாரா உதவியுடன் அஜித்திற்கு முதலில் கதை சொல்ல முயன்றேன். அப்போது நான் பள்ளி மாணவன் போல் உள்ளதாக அஜித் என்னை கிண்டல் செய்தார் எனவும், அஜித்துக்காக ஒரு பயங்கரமான கதை இருப்பதாகவும், அஜித் ஓகே சொன்ன உடனேயே அந்த படத்தை எடுக்க நான் தயார்" என பகிர்ந்துள்ளார்.