அதர்வாவுக்கு ஜோடியாக நடிக்கும் சோஷியல் மீடியா பிரபலம் | ராதிகாவுக்கு காலில் என்னாச்சு : நேரில் நலம் விசாரித்த சிவகுமார் | அல்லு அர்ஜுன் - சிரஞ்சீவி குடும்பத்தினர் மோதல் ? | நில சர்ச்சை விவகாரம் : ஜூனியர் என்.டி.ஆர் விளக்கம் | மே 31ல் ரிலீஸாகும் ‛மல்ஹர்' திரைப்படம் | என் கதாபாத்திரங்களை அவர் ஸ்டைலில் அசத்தியிருக்கிறார் : பஹத் பாசிலுக்கு மம்முட்டி பாராட்டு | இயக்குனர்களுக்கு இணையான சம்பளம் ; டர்போ கதாசிரியர் வேண்டுகோள் | 'வீர தீர சூரன்' முதல் கட்டப் படப்பிடிப்பு நிறைவு | காதலித்த நடிகை விபத்தில் இறக்க : தற்கொலை செய்து கொண்ட நடிகர் | 'செப்' ஆனார் ஏஆர் ரஹ்மான் மகள் ரஹீமா |
2001ம் ஆண்டு வெளிவந்த படம் 'ஆளவந்தான்'. கமல்ஹாசன் இரண்டு வேடங்களில் நடித்த இந்த படத்தில் ரவீனா டாண்டன், அனுஹாசன் உள்பட பலர் நடித்திருந்தார்கள். பாட்ஷா படத்தை இயக்கிய சுரேஷ் கிருஷ்ணா இயக்கி இருந்தார். கலைப்புலி எஸ்.தாணு தயாரித்திருந்தார். அன்றைய தேதியில் அதி நவீன தொழில்நுட்பத்தை பயன்படுத்தி படம் தயாராகி இருந்தது. என்றாலும் அப்போது படம் போதிய வரவேற்பை பெறவில்லை.
இதனால் தயாரிப்பாளர் தாணு பெரும் நஷ்டத்தை சந்தித்தார். இதுகுறித்து பின்னாளில் அவர் கூறும்போது “பெரும் பொருட் செலவில் எடுக்கப்பட்ட பல காட்சிகள் படத்தில் இடம் பெறவில்லை. திட்டமிட்டதை விட 3 மடங்கு செலவானது. சரியான திட்டமிடல் இல்லாததால் பெரும் நஷ்டத்தை சந்தித்தேன். அதிலிருந்து மீண்டு வர எனக்கு பல ஆண்டுகள் ஆனது” என்று தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில் 22 ஆண்டுகளுக்கு பிறகு தாணு படத்தை டிஜிட்டல் தொழில்நுட்பத்தில் வெளியிடுகிறார். உலகம் முழுவதும் ஆயிரம் தியேட்டர்களில் திரையிடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. படம் வெளியாகும் தேதி விரைவில் அறிவிக்கப்பட இருக்கிறது. இன்றைக்கு திரைப்படங்களில் நவீன தொழில்நுட்பத்தை வரவேற்கும் ரசிகர்களுக்கு ஆளவந்தான் ஆச்சர்யமூட்டும் படமாக இருக்கும் என்கிறார்கள்.