நில சர்ச்சை விவகாரம் : ஜூனியர் என்.டி.ஆர் விளக்கம் | மே 31ல் ரிலீஸாகும் ‛மல்ஹர்' திரைப்படம் | என் கதாபாத்திரங்களை அவர் ஸ்டைலில் அசத்தியிருக்கிறார் : பஹத் பாசிலுக்கு மம்முட்டி பாராட்டு | இயக்குனர்களுக்கு இணையான சம்பளம் ; டர்போ கதாசிரியர் வேண்டுகோள் | 'வீர தீர சூரன்' முதல் கட்டப் படப்பிடிப்பு நிறைவு | காதலித்த நடிகை விபத்தில் இறக்க : தற்கொலை செய்து கொண்ட நடிகர் | 'செப்' ஆனார் ஏஆர் ரஹ்மான் மகள் ரஹீமா | சிம்பு மீது புகார் : அண்ணன், தம்பி பிரச்னை என்கிறார் ஐசரி கணேஷ் | 'இந்தியன் 2' - புரமோஷன் இன்று ஆரம்பம் | ஜுனியர் என்டிஆருக்காக விட்டுக் கொடுத்த கரண் ஜோஹர் |
விக்ரம் பிரபு, ஸ்ரீதிவ்யா நடித்த 'ரெய்டு' படம் வருகிற 10ம் தேதி வெளிவருகிறது. இதன் அறிமுக நிகழ்ச்சி நேற்று நடந்தது. முன்னதாக படம் பற்றி விக்ரம் பிரபு நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது :
'டாணாக்காரன்' படத்திற்கு பிறகு நடிக்க ஒப்புக் கொண்ட படம் இது. ஏற்கெனவே 'புலிகுத்தி பாண்டி' படத்தில் இயக்குனர் முத்தையாவுடன் இணைந்து பணியாற்றி இருக்கிறேன். 'வெள்ளக்கார துரை' படத்தில் ஸ்ரீதிவ்யாவுடன் இணைந்து பணியாற்றி இருக்கிறேன். தற்போது நாங்கள் மூவரும் இணைந்திருக்கிறோம். இது சிவராஜ்குமார் நடித்த 'தகரு' என்ற கன்னட படத்தின் ரீமேக். இதற்காக அந்த படத்தை பார்த்தேன். சிவராஜ்குமார் மாஸ் ஹீரோ என்பதால் அவர் ஸ்டைலில் நடித்திருந்தார். நான் எனக்கு ஏற்ற வகையில் அந்த கேரக்டரை மாற்றிக் கொண்டேன். எந்த விதத்திலும் அவரை காப்பி அடிக்கவில்லை. அடிக்கவும் முடியாது.
டாணாக்காரன் படத்திற்கு பிறகு போலீஸ் வேடங்களாகவே வந்தது. அதை தவிர்த்து வந்தேன். இந்த படத்தின் கதை பிடித்திருந்ததால் ஒப்புக் கொண்டேன். தமிழுக்காக சின்ன சின்ன மாற்றங்களை செய்திருக்கிறோம். கடைசியாக நடித்த 'இறுகப்பற்று' படத்தில் இருந்து முற்றிலும் மாறுபட்ட படமாக இது இருக்கும் என்றார்.