ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
இலங்கை தமிழர் பிரச்னை தொடர்பாக, நடிகர் சங்கம் சார்பில் நடைபெற இருக்கும் உண்ணாவிரத போராட்டத்திற்காக அஜீத்தின் புதிய பட விழா தள்ளிபோய் உள்ளது. நடிகர் அஜீத் தற்போது விஷ்ணுவர்தன் இயக்கும் பெயரிடப்படாத (தற்காலிக பெயர் வலை) படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் ஷூட்டிங் கிட்டத்தட்ட முடியும் தருவாயில் உள்ளது. இதனையடுத்து சிறுத்தை சிவா இயக்கும் புதிய படத்தில் அஜீத் நடிக்க உள்ளார். தமன்னா, அஜீத்துடன் ஜோடி சேருகிறார். இப்படத்தை விஜயா புரொடக்ஷ்ன்ஸ் பிரம்மாண்டமாக தயாரிக்கிறது.
இப்படத்தின் துவக்க விழா ஏப்ரல் மாதம் 1-ஆம் தேதியன்று ஐதராபாத் நகரில் துவங்க இருந்தது. ஆனால் ஏப்ரல் 2ம் தேதி இலங்கை தமிழர் பிரச்னை தொடர்பாக நடிகர் சங்கம் அழைப்பு விடுத்துள்ள உண்ணாவிரத போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து நடிகர் அஜீத் அப்போராட்டத்தில் கலந்து கொள்ள இருக்கிறார். இதனால் இப்படத்தின் தயாரிப்பாளருடன் கலந்தாலோசித்து படத்தின் துவக்க விழாவையும், அதை தொடர்ந்து நடக்க உள்ள படப்பிடிப்பையும் ஏப்ரல் 5ஆம் தேதிக்கு தள்ளி வைத்துள்ளார் அஜீத்.