பாதுகாப்பு வீரர்களின் தியாகம்: சமந்தா நெகிழ்ச்சி | 23வது ஆண்டில் தனுஷ்! - குபேரா படத்தின் கதாபாத்திரத்தின் பெயர் வெளியானது! | ‛ஜனநாயகன்' படத்தில் போலீஸ் வேடத்தில் நடிக்கும் விஜய்! லீக் அவுட் ஆன புகைப்படம்!! | பாடகி கெனிஷாவுடன் என்ட்ரி கொடுத்த ரவி மோகன்- ஆர்த்திக்கு ஆதரவாக குரல் கொடுத்த ராதிகா - குஷ்பூ! | கமலின் 237வது படத்தை இயக்கும் அன்பறிவ் பிறந்த நாள் - வீடியோ வெளியிட்ட ராஜ்கமல் பிலிம்ஸ்! | ரஜினி அடுத்த பட ரேசில் வினோத், அருண்குமார்! | சிவாஜி குடும்பத்தில் இருந்து மற்றொரு நடிகர்! | சிவகார்த்திகேயனுக்கு அப்பாவாக மோகன்லால்? | பூல் சக் மாப் : 60 கோடி நஷ்டஈடு கேட்டு பிவிஆர் ஐநாக்ஸ் வழக்கு | வியாபார நிலையில் முன்னேறிய சூரி |
சமீபத்திய படங்களில் பெரிய அளவில் போதைப் பொருட்கள் பயன்படுத்தும் காட்சிகள் இடம் பெற்று வருகின்றன. அப்படி சமீபத்தில் நடிகர் விஜய் தேவரகொண்டாரின் தம்பி ஆனந்த் தேவரகொண்டா நடிப்பில் தெலுங்கில் வெளியான பேபி என்கிற திரைப்படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது. ஆனால் இந்தப் படத்தில் போதைப் பொருள் பயன்படுத்தும் காட்சிகளும் இடம்பெற்று இருந்தன. இதுபோன்ற காட்சிகள் இளைஞர் சமுதாயத்தை தவறாக வழி நடத்தும் என்று கூறியுள்ள ஐதராபாத் போலீஸ் கமிஷனர் அசோக், தற்போது பேபி படக்குழுவினருக்கு விசாரணைக்கு ஆஜராகுமாறு சம்மன் அனுப்பியுள்ளார்.
மேலும் ஆந்திராவில் போதை பொருட்கள் பயன்பாடு அதிக அளவில் பெங்களூரில் இருந்து தான் புழக்கத்தில் விடப்படுகின்றன என்பதை கண்டறிந்து அவற்றை தடுக்கும் முயற்சியில் போலீசார் ஈடுபட்டு வரும் நிலையில் இதுபோன்ற படங்கள் போதைப் பொருட்கள் பழக்கத்தை ஊக்குவிக்கும் விதமாக இருப்பதாக அவர் கூறியுள்ளார். மேலும் இனிவரும் நாட்களில் இதுபோன்ற போதைப்பொருள் காட்சிகளை எடுக்கும் படங்களுக்கும் இது ஒரு எச்சரிக்கையாக இருக்கும் என்றும் அவர் கூறியுள்ளார்.