கதைகளை புனைவதால் வருத்தம்: பாடகி சைந்தவி | மீண்டும் அயோத்தி மந்திர மூர்த்தி இயக்கத்தில் நடிக்கும் சசிகுமார்! | 4 மொழிகளில் திரைக்கு வரும் அமலாபாலின் ‛லெவல் கிராஸ்' | இந்தியன்-2 படத்தோடு வெளியாகும் இந்தியன்- 3 படத்தின் டிரைலர்! | சர்ச்சையாக பேசிய திமுக பேச்சாளர்: நடிகை ராதிகா புகார் | மோசடி வழக்கில் நயன்தாரா பட இயக்குனர் கைது | வித்தியாசமான ஹேர்ஸ்டைலுக்கு மாறிய கீர்த்தி சுரேஷ் | ரிலீஸ் செய்ய மறுத்த ஆத்திரத்தில் பேஸ்புக்கில் படத்தை வெளியிட்ட டொவினோ தாமஸ் பட இயக்குனர் | கார் விபத்தில் சிக்கிய லியோ நடிகரின் குடும்பம் ; உறவினர் ஒருவர் பலி | இயக்குனரின் கணவர் பேட்டியால் சிக்கலில் மம்முட்டி |
ரஜினிகாந்த் நடிப்பில் கடந்த மாதம் வெளியான ஜெயிலர் திரைப்படம் மிகப்பெரிய வெற்றியும், வசூலையும் பெற்று புதிய சாதனைகளை படைத்துள்ளது. இதைத்தொடர்ந்து தனது மகள் ஐஸ்வர்யா இயக்கியுள்ள லால் சலாம் படத்திலும் முக்கிய கதாபாத்திரத்தில் ரஜினி நடித்து வந்தார். விஷ்ணு விஷால், விக்ராந்த் இருவரும் கதாநாயகர்களாக நடித்துள்ள இந்த படம் கிரிக்கெட்டை பின்னணியாக கொண்டு உருவாகி உள்ளது. இந்த படத்தில் மொய்தீன் பாய் என்கிற கதாபாத்திரத்தில் ரஜினி நடித்துள்ளார்.
இதன் படப்பிடிப்பு ஏற்கனவே முடிவடைந்துவிட்ட நிலையில் இதன் போஸ்ட் புரொடக்சன் பணி நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் இந்த படத்திற்கு ரஜினிகாந்த் தற்போது டப்பிங் பேசி வருகிறார். இது குறித்த தகவலை படத்தின் இயக்குனர் ஐஸ்வர்யா வெளியிட்டுள்ள பதிவில், “இன்று மிகச்சிறந்த நாள்.. எனது தந்தையுடன் டப்பிங் பணியில்..” என்று குறிப்பிட்டுள்ளார்.