ராதிகாவுக்கு காலில் என்னாச்சு : நேரில் நலம் விசாரித்த சிவகுமார் | அல்லு அர்ஜுன் - சிரஞ்சீவி குடும்பத்தினர் மோதல் ? | நில சர்ச்சை விவகாரம் : ஜூனியர் என்.டி.ஆர் விளக்கம் | மே 31ல் ரிலீஸாகும் ‛மல்ஹர்' திரைப்படம் | என் கதாபாத்திரங்களை அவர் ஸ்டைலில் அசத்தியிருக்கிறார் : பஹத் பாசிலுக்கு மம்முட்டி பாராட்டு | இயக்குனர்களுக்கு இணையான சம்பளம் ; டர்போ கதாசிரியர் வேண்டுகோள் | 'வீர தீர சூரன்' முதல் கட்டப் படப்பிடிப்பு நிறைவு | காதலித்த நடிகை விபத்தில் இறக்க : தற்கொலை செய்து கொண்ட நடிகர் | 'செப்' ஆனார் ஏஆர் ரஹ்மான் மகள் ரஹீமா | சிம்பு மீது புகார் : அண்ணன், தம்பி பிரச்னை என்கிறார் ஐசரி கணேஷ் |
கொரோனா தாக்கம் வந்த பிறகு ஒரு மொழியில் தயாராகும் மற்ற படங்கள் மற்ற மொழிகளிலும் வரவேற்பைப் பெறுவது அதிகமாகிவிட்டது. தெலுங்கில் தயாரான 'ஆர்ஆர்ஆர்', கன்னடத்தில் தயாரான 'கேஜிஎப், காந்தாரா' ஆகிய படங்கள் மற்ற மொழிகளில் டப்பிங் செய்யப்பட்டு வெளியாகி நல்ல வசூலைப் பெற்றது.
அந்த வரிசையில் தமிழ்ப் படங்கள் மட்டும் இடம் பெறாமல் இருந்தது. 'பொன்னியின் செல்வன்' படம் அப்படிப்பட்ட ஒரு சாதனையைப் படைக்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் மற்ற மொழிகளில் அந்தப் படத்தின் இரண்டு பாகங்களையும் ரசிகர்கள் கண்டு கொள்ளவே இல்லை. அந்த வருத்தத்தைத் தற்போது 'ஜெயிலர்' படம் போக்கியுள்ளது.
தெலுங்கில் சுமார் 12 கோடிக்கு விற்பனையான 'ஜெயிலர்' படம் பங்குத் தொகையாக மட்டும் 42 கோடியைத் தந்து 30 கோடி ரூபாய் லாபத்தைத் தந்துள்ளது. வரும் நாட்களிலும் படம் கூடுதல் லாபத்தைத் தரும் என்கிறார்கள்.
இதற்கு முன்பு கன்னடப் படமான 'காந்தாரா' படம் 27 கோடி ரூபாய் லாபத்தைத் தந்ததே சாதனையாக இருந்தது. அதை தற்போது 'ஜெயிலர்' முறியடித்துள்ளது.