தீபாவளியை குறிவைக்கும் கங்குவா படக்குழு | ஸ்ரீ கணேஷ் இயக்கத்தில் சித்தார்த் | ராஜமவுலி - மகேஷ்பாபு பட தயாரிப்பு நிறுவனம் வெளியிட்ட திடீர் அறிவிப்பு | வளரும் நடிகர் பட்டியலில் இணைந்த கவின் | மிஸ்டர் அண்ட் மிஸஸ் படத்தில் ஜோடி சேரும் ராபர்ட் மாஸ்டர் - வனிதா விஜயகுமார் | ஆரம்பமே ஹீரோயின் : அசத்தும் தேஜூ அஸ்வினி | மோடி பயோபிக் படத்தில் நடிப்பது உண்மையா? - சத்யராஜ் தந்த விளக்கம் | இந்தியன் - 2, இந்தியன்- 3 படம் குறித்த புதிய அப்டேட் வெளியிட்ட கமல் - ஷங்கர் | கூத்தாடி ஆகிட்டேன்னு திட்டுவார் : அப்பா குறித்து மதுரை முத்து உருக்கம் | முதியோர் இல்லத்தில் பிறந்தநாள் கொண்டாடிய கேப்ரில்லா செல்லஸ் |
1991ம் ஆண்டில் பாரதிராஜா இயக்கிய புது நெல்லு புது நாத்து என்ற படத்தில் அறிமுகமானவர் சுகன்யா. அதன் பிறகு மகாநதி, சின்ன கவுண்டர், வால்டர் வெற்றிவேல், இந்தியன் உள்பட ஏராளமான படங்களில் நடித்தவர், 2002ம் ஆண்டில் ஸ்ரீதரன் என்பவரை திருமணம் செய்து கொண்டு அமெரிக்காவில் குடியேறினார். என்றாலும் ஓராண்டுக்குள் திருமண வாழ்க்கையில் கருத்து வேறுபாடு ஏற்பட்டு கணவனை பிரிந்தார். அதன்பிறகும் அவ்வப்போது சில படங்களில் நடித்து வந்தவர், கடைசியாக 2019ம் ஆண்டில் திருமணம் என்ற படத்தில் நடித்தார்.
இந்த நிலையில் சுகன்யா தற்போது அளித்துள்ள ஒரு பேட்டியின்போது, மறுமணம் செய்து கொள்ளும் எண்ணம் இருக்கிறதா? என்று அவரிடத்தில் கேட்கப்பட்ட கேள்விக்கு, ‛‛இதுவரை அப்படி ஒரு எண்ணம் எனக்கு இல்லை. இப்போது 50 வயதாகிறது. இனிமேல் நான் கல்யாணம், குழந்தை என்று இறங்கினால், பிறக்கப் போகும் குழந்தை என்னை அம்மா என்று அழைக்குமா? இல்லை பாட்டி என்று அழைக்குமா என்று நானே யோசித்துப் பார்க்கிறேன். என்றாலும் மறுமணம் வேண்டாம் என்றும் சொல்லவில்லை, வேண்டும் என்றும் சொல்லவில்லை'' என்று அந்த கேள்விக்கு இரண்டுவிதமான பதில் கொடுத்துள்ளார் சுகன்யா.