'மைதான்' படம் தோல்வி : தயாரிப்பாளர் போனி கபூர் விளக்கம் | என்கிட்ட மோதாதே... நான் ராஜாதி ராஜனடா...! | உள்ளாட்சி தேர்தலை மையமாக வைத்து உருவாகி உள்ள ‛எலக்சன்' | நடிகை நவ்யா நாயரின் சென்னை நினைவுகள் | அஜித்திற்கு இப்படி ஒரு வினோத பிரச்சனை இருந்ததா ? சுந்தர்.சி கூறிய ஆச்சர்ய தகவல் | அல்லு அர்ஜுன் மீது ஆந்திர போலீசார் வழக்கு | 'சர்பரோஸ்' 25ம் வருடத்தில் 2ம் பாகத்தை அறிவித்த அமீர்கான் | படத்தை ரிலீஸ் பண்ண விடாமல் டொவினோ தாமஸ் தடுக்கிறார் ; இயக்குனர் விரக்தி | குகைக்குள் விழுந்தவருக்கு பிஸ்கட்டால் மேக்கப் ; மஞ்சும்மேல் பாய்ஸ் இயக்குனர் புது தகவல் | ஜிவி பிரகாஷ் - சைந்தவி பிரிவு: குடும்ப பிரச்னை காரணமா? |
மீசையை முறுக்கு நடிகர் ஆனந்த் இயக்கி, நடித்துள்ள படம் ‛நண்பன் ஒருவன் வந்த பிறகு'. இதில் குமரவேல், ஆர்.ஜே.விஜய், பவானிஸ்ரீ ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். ஏ.எச். காசிப் இசையமைத்துள்ள இப்படத்தை மசாலா பாப்கார்ன் நிறுவனம் தயாரித்துள்ளனர். ஏற்கனவே இந்த படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து சில வருடங்கள் கடந்தும் வெளியாகவில்லை. தற்போது படம் வெளியீட்டிற்கு தயாராகி வருகிறது.
இந்நிலையில் வெங்கட்பிரபு நேற்று அடுத்து என பதிவிட்டு இன்று 11 மணிக்கு வெளியாகும் என குறிப்பிட்டு இருந்தார். இதனால் இது அடுத்து அவர் விஜய்யை வைத்து இயக்க உள்ள 68வது படத்தின் அப்டேட்டாக இருக்கும் என ரசிகர்கள் எதிர்பார்த்தனர். ஆனால் ஏமாற்றமே மிஞ்சியது. அவர் வெளியிட்டது ‛நண்பன் ஒருவன் வந்த பிறகு' படத்தை பற்றி தான். வெங்கட்பிரபு கிப்ட் என குறிப்பிட்டு இந்த படத்தின் புரொமோ வீடியோ வெளியிட்டார். இந்த படத்தை இயக்குனர் வெங்கட் பிரபு வழங்குவதாக தெரிகிறது. மேலும், கிடப்பில் இருந்த இப்படத்தை வெங்கட் பிரபு தனது ப்ளாக் டிக்கெட் நிறுவனம் மூலம் வெளியிடுகிறார் என கூறப்படுகிறது.