முதல் பாடல் மே 22ல், படம் ரிலீஸ் ஜூலை 12ல்: ஒரே போஸ்டரில் இரண்டு அப்டேட் வெளியிட்ட 'இந்தியன்-2' படக்குழு | ‛படையப்பா' ரீ-ரிலீஸாகிறது : ரஜினியை சந்தித்து பேசிய பிஎல் தேனப்பன் | அஜித்தின் ‛குட் பேட் அக்லி' முதல் பார்வை வெளியீடு - எதிர்பாராததை எதிர்பாருங்கள் | விஜய், தனுஷை தொடர்ந்து சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாகும் ராஷ்மிகா | தீபாவளியை குறிவைக்கும் கங்குவா படக்குழு | ஸ்ரீ கணேஷ் இயக்கத்தில் சித்தார்த் | ராஜமவுலி - மகேஷ்பாபு பட தயாரிப்பு நிறுவனம் வெளியிட்ட திடீர் அறிவிப்பு | வளரும் நடிகர் பட்டியலில் இணைந்த கவின் | மிஸ்டர் அண்ட் மிஸஸ் படத்தில் ஜோடி சேரும் ராபர்ட் மாஸ்டர் - வனிதா விஜயகுமார் | ஆரம்பமே ஹீரோயின் : அசத்தும் தேஜூ அஸ்வினி |
நடிகரும், அமைச்சருமான உதயநிதி நடித்துள்ள, 'மாமன்னன்' படத்தின் இசை வெளியீட்டு விழா, சென்னையில் நடந்தது. சிறப்பு விருந்தினராக கமல் பங்கேற்றார். மாரி செல்வராஜ் பேசுகையில், 'தேவர் மகன் படம் எனக்கு வலியை தந்தது. அதில் நடிகர் வடிவேலு நடித்த இசக்கி கேரக்டர் தான், மாமன்னன் படத்தின் கதைக் களமாக அமைந்தது' என்றார்.
தன் படத்தை பற்றி கடுமையாக விமர்சித்த மாரி செல்வராஜிடம், எந்த ஒரு அதிருப்தியையும் கமல் வெளிப்படுத்தவில்லை. 'மாமன்னன்' படத்தை பிரயேத்கமாக பார்த்த கமல், மாரி செல்வராஜின் கையை பிடித்து பாராட்டினார்.
அதே நேரத்தில், உதவி இயக்குனராக இருந்தபோதே, 'தேவர் மகன்' படத்தை கடுமையாக விமர்சித்து, மாரி செல்வராஜ், கமலுக்கு கடிதம் எழுதியுள்ளார். 'ஒரு குறிப்பிட்ட சமுதாயத்தினரின் ஆதிக்கத்தை வெளிப்படுத்தும் படம்' என விமர்சித்துள்ள அந்த கடிதம், இப்போது சமூக வலைதளங்களில் சூட்டை கிளப்பியுள்ளது. மாரி செல்வராஜுக்கு எதிராக, மக்கள் நீதி மய்யம் கட்சியினர், சமூக வலைதளங்களில் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
இது குறித்து, மய்யம் நிர்வாகிகள் கூறியதாவது: மனிதனை நிறத்தால் கூட பிரித்து பார்க்க தெரியாதவர் கமல். அவரா செயற்கையாக உருவாக்கப்பட்ட மதம், ஜாதி வைத்து பிரித்துப் பார்ப்பார்? மனிதநேயம் பேசப் பிறந்தவர். அவரை புரியாதவர்களை, அறியாதவர்களாக எண்ணி மாரி செல்வராஜை நாங்கள் மன்னிக்கிறோம். மாரி செல்வராஜ் எழுதியுள்ள கடிதத்தின் தொனி, படைப்பாளியும், நடிகருமான கமல் மீது நிகழ்த்தும் வன்மம்; கடும் கண்டனத்துக்குரியது.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
'சாதகமான விளைவு!
எழுத்தாளர் ஜெயமோகன் கூறியுள்ளதாவது:மாரி செல்வராஜின் அமைதியின்மை என்பது, 'தேவர் மகன்' சினிமா உருவாக்கியது அல்ல. அந்த சினிமாவின் மனநிலையோ, பார்வையோ அவரை அமைதியிழக்க செய்யவில்லை. அது காட்டும் உண்மையான சமூகச் சூழல் தான், அந்த அமைதியின்மையை உருவாக்கியது. அது உண்மையை எடுத்து முன்னால் வைத்து, 'இதோ இது தான் நம் சமூக யதார்த்தம்' என, காட்டியது. தலித் மக்கள் நடுவே அந்த அமைதியின்மை உருவாக, முக்கியமான இன்னொரு காரணம், அப்போது உருவாகி வந்த தலித் அரசியல். அதன் வழியாக இளைய தலைமுறை வளர்ந்தது.அந்த அமைதியின்மையில் இருந்து மாரி செல்வராஜின் படங்கள் உருவாயின என, அவர் சொல்கிறார்.
அப்படியென்றால் அது, 'தேவர் மகன்' படத்தின் சாதகமான விளைவு தான். தேவர் மகன் காட்டும் உண்மைக்கு, தலித் தரப்பில் இருந்து எழ வேண்டிய எதிர்வினை மிகச்சரியாக அதுவே. அவ்வாறென்றால் மாரி செல்வராஜின் படங்கள், 'தேவர் மகன்' படத்தின் வெற்றி என்றே சொல்ல வேண்டும். 'படிங்கடா' என, தேவர் மகனின் சக்திவேல் எழுப்பிய குரல் தான், 'அசுரன்' படம் வரை மிக வலுவாக எதிரொலிக்கிறது.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
- நமது நிருபர் -