'தி கோட்', விஜய்யின் விஎப்எக்ஸ் பணிகள் நிறைவு | கமலின் தக் லைப் படத்தின் புதிய அப்டேட் | எல்லா படங்களுக்கும் கதாநாயகி அவசியம் இல்லை : நிகிலா விமல் | ரசிகர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தி விட்ட பிரபாஸ் | மீண்டும் ஷாரூக்கான் படத்திற்கு இசையமைக்கும் அனிருத் | ஆளே இல்லாத நடிகர் சூர்யா வீட்டுக்கு பாதுகாப்பு : அமைச்சரின் பரிந்துரையில் கட்டணமின்றி சலுகை | இளையராஜாவை சந்தித்த அமைச்சர் அன்பில் மகேஷ் | ஆவேசம் பஹத் பாசில் பாணியில் ரிலீஸ் தேதியை அறிவித்த விஸ்வக் சென் | சூர்யா படத்தில் கதாநாயகியாக இணையும் பூஜா ஹெக்டே | புஷ்பா 2 வில் இருந்து விலகிய எடிட்டர் ஆண்டனி ரூபன் ? |
ஜீ தமிழில் ஒளிபரப்பாகி வரும் மாரி தொடரில் வில்லி கதாபாத்திரத்தில் நடித்து வந்தார் நடிகை சோனா. அவரது நடிப்பை பாராட்டி நடந்து முடிந்த ஜீ தமிழ் குடும்ப விருது விழாவிலும் சிறந்த வில்லிக்கான விருது சோனாவிற்கு வழங்கப்பட்டது. இந்நிலையில், ஷூட்டிங் ஸ்பாட்டில் சக நடிகையுடன் ஏற்பட்ட பிரச்னை காரணமாக சோனா அந்த சீரியலை விட்டு விலகிவிட்டார். இதனையடுத்து சோனா நடித்து வந்த தாரா கதாபாத்திரத்தில் நடிகை சாதனா நீண்ட நாட்களுக்கு பிறகு கம்பேக் கொடுத்துள்ளார். சினிமாவில் வில்லி மற்றும் குணச்சித்திர வேடங்களில் நடித்து புகழ் பெற்ற சாதனா சின்னத்திரையில் 'தென்றல்' தொடரின் மூலம் அறிமுகமானார். அதில் வில்லியாக சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி பாராட்டுகளை பெற்ற அவர் தற்போது மாரி தொடரில் ரீ-என்ட்ரி கொடுத்திருப்பது ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ளது.