அதர்வாவுக்கு ஜோடியாக நடிக்கும் சோஷியல் மீடியா பிரபலம் | ராதிகாவுக்கு காலில் என்னாச்சு : நேரில் நலம் விசாரித்த சிவகுமார் | அல்லு அர்ஜுன் - சிரஞ்சீவி குடும்பத்தினர் மோதல் ? | நில சர்ச்சை விவகாரம் : ஜூனியர் என்.டி.ஆர் விளக்கம் | மே 31ல் ரிலீஸாகும் ‛மல்ஹர்' திரைப்படம் | என் கதாபாத்திரங்களை அவர் ஸ்டைலில் அசத்தியிருக்கிறார் : பஹத் பாசிலுக்கு மம்முட்டி பாராட்டு | இயக்குனர்களுக்கு இணையான சம்பளம் ; டர்போ கதாசிரியர் வேண்டுகோள் | 'வீர தீர சூரன்' முதல் கட்டப் படப்பிடிப்பு நிறைவு | காதலித்த நடிகை விபத்தில் இறக்க : தற்கொலை செய்து கொண்ட நடிகர் | 'செப்' ஆனார் ஏஆர் ரஹ்மான் மகள் ரஹீமா |
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலி. கிரிக்கெட் ரசிகர்கள் இவரை அன்போடு தாதா என்று அழைப்பார்கள். 2000ஆம் ஆண்டில் இந்திய அணிக்குள் மேட்ச் பிக்ஸிங் விவகாரம் தலைதூக்கிய பிறகு கேப்டனாக கங்குலி நியமிக்கப்பட்டார். கங்குலி தலைமையில் வெளிநாடுகளில் 28 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி இந்திய அணி 11 வெற்றிகளைப் பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.
கடந்த 2021ஆம் ஆண்டு தனது வாழ்க்கைப் பயணத்தை அடிப்படையாகக் கொண்டு பயோபிக் திரைப்படம் ஒன்று உருவாக்க இருப்பதாக கங்குலி தெரிவித்திருந்தார். ஆனால், அதற்கான பணிகள் எதுவும் தொடங்கப்படவில்லை. இந்த நிலையில், இப்போது கங்குலியின் பயோபிக் படத்தை பாலிவுட் தயாரிப்பாளர் லவ் ரஞ்சன் தயாரிக்கிறார் என தகவல் வெளியாகியுள்ளது. சமீபத்தில் அவர் கங்குலியை நேரில் சந்தித்து இது தொடர்பாக பேசியதாக கூறப்படுகிறது.
இப்படம் இந்த ஆண்டு இறுதியில் துவங்குகிறது என கூறப்படுகிறது. கூடுதலாக, இந்த படத்தில் கங்குலியாக நடிக்க ரன்பீர் கபூர் உடன் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. இந்த படம் கங்குலியின் ஆரம்ப கால கட்டத்தில் இருந்து பின்னர் பிசிசிஐ தலைவராக நியமிக்கப்பட்டது வரை நடந்த சம்பவங்களை அடிப்படையாகக் வைத்து உருவாகிறது என்கிறார்கள்.