விஜயகாந்த் மகனின் உருக்கமான ஆசை | கர்ப்பிணி பெண்களின் பேஷன் ஷோவில் கலந்து கொண்ட அமலாபால் | மம்முட்டியை இயக்கும் கவுதம் மேனன் | சிவகார்த்திகேயனை இயக்க தயாராகும் சிபி சக்ரவர்த்தி | எனக்கு பிடித்த இடம் : நயன்தாரா | 'கூலி' படப்பிடிப்புக்கு முன்பாக ரஜினிகாந்த் சிறு ஓய்வு ? | திருச்செந்தூர், கன்னியாகுமரி கோயில்களில் கணவருடன் நயன்தாரா வழிபாடு | புதுமுகங்களின் 'குற்றம் புதிது' | கன்னட ஹீரோ மீது கொடூர தாக்குதல் | சின்னத்திரை இயக்குனர்கள் சங்கத் தலைவராக மங்கை அரிராஜன் வெற்றி |
நடிகர் ரஜினிகாந்த் , தெலுங்கு நடிகர் பாலகிருஷ்ணா, கன்னட நடிகர் சிவராஜ் குமார் இவர்கள் மூவரும் தவிர்க்க முடியாத இந்திய சினிமாவின் உச்ச நட்சத்திரங்களாக வலம் வருகின்றனர். தற்போது இவர்கள் மூவரும் இணைந்து ஒரு படம் நடிக்கவுள்ளதாக தகவல் பரவி வருகிறது. அந்த தகவல்களின் படி, ஒரு புகழ்பெற்ற கன்னட இயக்குனர் இயக்கத்தில் இவர்கள் இணைந்து நடிப்பதாக கூறப்படுகிறது.
இரண்டு பாகங்களாக உருவாகும் இந்த படத்தின் முதல் பாகத்தில் முதன்மை கதாபாத்திரமாக சிவராஜ் குமார் நடிக்கிறார். சிறிது நேரம் மட்டும் பாலகிருஷ்ணா நடிப்பார் என்கிறார்கள். இந்த படத்தின் இரண்டாம் பாகத்தில் ரஜினிகாந்த் மற்றும் பாலகிருஷ்ணா இருவரும் இணைந்து நடிக்கின்றனர் என்று தகவல்கள் வெளியாகியுள்ளது. சமூக வலைதளங்களில் இந்த செய்தி வைரலாகி வருகிறது. விரைவில் இது குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.