அதர்வாவுக்கு ஜோடியாக நடிக்கும் சோஷியல் மீடியா பிரபலம் | ராதிகாவுக்கு காலில் என்னாச்சு : நேரில் நலம் விசாரித்த சிவகுமார் | அல்லு அர்ஜுன் - சிரஞ்சீவி குடும்பத்தினர் மோதல் ? | நில சர்ச்சை விவகாரம் : ஜூனியர் என்.டி.ஆர் விளக்கம் | மே 31ல் ரிலீஸாகும் ‛மல்ஹர்' திரைப்படம் | என் கதாபாத்திரங்களை அவர் ஸ்டைலில் அசத்தியிருக்கிறார் : பஹத் பாசிலுக்கு மம்முட்டி பாராட்டு | இயக்குனர்களுக்கு இணையான சம்பளம் ; டர்போ கதாசிரியர் வேண்டுகோள் | 'வீர தீர சூரன்' முதல் கட்டப் படப்பிடிப்பு நிறைவு | காதலித்த நடிகை விபத்தில் இறக்க : தற்கொலை செய்து கொண்ட நடிகர் | 'செப்' ஆனார் ஏஆர் ரஹ்மான் மகள் ரஹீமா |
மாநாடு படத்தின் வெற்றிக்கு பின் மீண்டும் சுறுசுறுப்பாகிவிட்டார் நடிகர் சிம்பு. அவரது நடிப்பில் வெந்து தணிந்தது காடு, பத்து தல ஆகிய இரண்டு படங்கள் வெளியாகிவிட்டன. இரண்டுமே ஓரளவிற்கு வரவேற்பை பெற்றுள்ளது. அடுத்து சிம்புவின் 48வது படத்தை இயக்குனர் தேசிங்கு பெரியசாமி இயக்குவதாகவும், கமல்ஹாசனின் ராஜ்கமல் நிறுவனம் தயாரிப்பதாகவும் சமீபத்தில் அறிவித்திருந்தனர். தற்போது இந்த படத்திற்காக நடிகர்கள், நடிகைகள் தேர்வுகள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் இப்படத்தின் படப்பிடிப்பை இந்த வாரத்தில் இருந்து சென்னையில் தொடங்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.