முதல் பாடல் மே 22ல், படம் ரிலீஸ் ஜூலை 12ல்: ஒரே போஸ்டரில் இரண்டு அப்டேட் வெளியிட்ட 'இந்தியன்-2' படக்குழு | ‛படையப்பா' ரீ-ரிலீஸாகிறது : ரஜினியை சந்தித்து பேசிய பிஎல் தேனப்பன் | அஜித்தின் ‛குட் பேட் அக்லி' முதல் பார்வை வெளியீடு - எதிர்பாராததை எதிர்பாருங்கள் | விஜய், தனுஷை தொடர்ந்து சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாகும் ராஷ்மிகா | தீபாவளியை குறிவைக்கும் கங்குவா படக்குழு | ஸ்ரீ கணேஷ் இயக்கத்தில் சித்தார்த் | ராஜமவுலி - மகேஷ்பாபு பட தயாரிப்பு நிறுவனம் வெளியிட்ட திடீர் அறிவிப்பு | வளரும் நடிகர் பட்டியலில் இணைந்த கவின் | மிஸ்டர் அண்ட் மிஸஸ் படத்தில் ஜோடி சேரும் ராபர்ட் மாஸ்டர் - வனிதா விஜயகுமார் | ஆரம்பமே ஹீரோயின் : அசத்தும் தேஜூ அஸ்வினி |
'பசங்க' படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் பாண்டிராஜ். இதுவரை பத்து படங்களை இயக்கிய பாண்டிராஜ் கடைசியாக இயக்கி வெளிவந்த படம் சூர்யா நடித்த 'எதற்கும் துணிந்தவன்'. அந்தப் படம் பெரிய வரவேற்பைப் பெறவில்லை.
அடுத்து அருள்நிதி நடிக்க உள்ள ஒரு படத்துக்கு கதை எழுத உள்ளார் பாண்டிராஜ். அதோடு விஷால் கதாநாயகனாக நடிக்க உள்ள ஒரு படத்தை இயக்க பாண்டிராஜ் பேசி வருகிறாராம். இருவரும் இணைந்து 2016ல் வெளிவந்த 'கதகளி' படம் மிகவும் சுமாராகப் போன படம். அதற்குப் பிறகு ஏழு ஆண்டுகளுக்குப் பிறகு அவர்கள் இணைய உள்ள இந்தப் படத்தை ஸ்டுடியோ க்ரீன் நிறுவனம் தயாரிக்கப் போவதாகச் சொல்கிறார்கள்.
தற்போது விக்ரம் நடிக்க 'தங்கலான்' படத்தையும், சூர்யா நடிக்க 'கங்குவா' படத்தையும் தயாரித்து வரும் அந்நிறுவனத்தின் அடுத்த படமாக விஷால், பாண்டிராஜ் படம் இருக்கும் என்கிறார்கள். விரைவில் இதற்கான அறிவிப்புகள் வரலாம்.