இரண்டே நாளில் அஜித்தின் படப்பிடிப்பு நிறுத்தப்பட்டதா? | கருப்பு பணத்தை வெள்ளை ஆக்குகிறேனா? - நடிகர் பாலா அதிரடி பதில் | சூர்யா படத்தில் ஹாலிவுட் பைட் மாஸ்டர் | தெலங்கானாவில் 10 நாட்களுக்கு தியேட்டர்களை மூட முடிவு | சைந்தவி உடனான பிரிவை வைத்து விவாதம் : தமிழர் மாண்பு குறைந்து விட்டதா என ஜிவி பிரகாஷ் ஆதங்கம் | ஹாலிவுட் வெப் தொடரில் தபு | ஆர்த்தி சுபாஷுக்கு திருமணமா? | விரைவில் வெளியாகும் திகில் தொடர் | சக நடிகை விபத்தில் மரணம்! வருத்தத்தில் மாரி ஹீரோயின் | கிளாமர் ரூட்டை கையில் எடுத்த ஷிவானி நாராயணன்! |
நடிகர் யோகிபாபுவை பொருத்தவரை தமிழில் பிஸியான நகைச்சுவை நடிகராக நடித்து வருகிறார். இன்னொரு பக்கம் சரியான கதைகளை தேர்ந்தெடுத்து கதையின் நாயகனாகவும் நடித்து வருகிறார். தமிழிலேயே பல படங்கள் கைவசம் வைத்திருக்கும் யோகிபாபுவை இயக்குனர் அட்லீ தற்போது பாலிவுட் நடிகர் ஷாரூக்கானை வைத்து தான் இயக்கி வரும் ஜவான் படத்தின் மூலமாக பாலிவுட்டுக்கும் அழைத்து சென்று விட்டார். இதைத்தொடர்ந்து தற்போது முதல் முறையாக மலையாள திரையுலகிலும் அடியெடுத்து வைத்துள்ளார் யோகிபாபு.
சில மாதங்களுக்கு முன்பு மலையாளத்தில் குறைந்த பட்ஜெட்டில் வெளியாகி 50 கோடிக்கு மேல் வசூலித்த படம் ஜெய ஜெய ஜெய ஜெய ஹே. இந்த படத்தை இயக்கிய விபின் தாஸ் அடுத்ததாக மலையாளத்தில் இயக்கவுள்ள குருவாயூர் அம்பலநடையில் என்கிற படத்தில் தான் தற்போது யோகிபாபு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க ஒப்பந்தமாகி உள்ளார். இந்த படத்தின் கதை பிடித்துப்போனதால் நடிகர் பிரித்விராஜ் வில்லன் கதாபாத்திரத்தில் தானே முன் வந்து நடிக்க ஒப்புக்கொண்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. ஜெய ஜெய ஜெய ஜெய ஹே படத்தில் கதாநாயகனாக நடித்த இயக்குனர் பசில் ஜோசப் தான் இந்த படத்திலும் கதாநாயகனாக நடிக்கிறார்.