விஜய் சேதுபதி - பூரி ஜெகன்னாத் படத்திற்கு ஹிந்தியில் தலைப்பு? | நேரடியாக ஓடிடியில் வெளியாகும் கீர்த்தி சுரேஷ் படம் | 22 ஆண்டு காத்திருப்பு : விஷ்ணு மஞ்சு நெகிழ்ச்சி | யாருக்கு யார் வில்லன்? மோகன்லால் மோகன்பாபு போட்டாபோட்டி | மருத்துவர்களின் அலட்சியத்தால் செல்லப்பூனை மரணம் ; திலீப் பட இயக்குனர் போலீசில் புகார் | லண்டனில் கங்குலியுடன் சந்திப்பு ; பிரமித்து விலகாத நவ்யா நாயர் | குபேராவை கேரளாவில் வெளியிடும் துல்கர் சல்மான் | 'தொடரும்' படத்தின் கதை என்னுடையது ; வில்லங்க இயக்குனரின் புதிய சர்ச்சை | 'தி ராஜா சாப்' டீசர் : ஹிந்தி, தெலுங்கு பார்வைகளில் போட்டி | மைனா நந்தினியின் 'குட் டே' |
தமிழ் நடிகைகளில் ஐஸ்வர்யா ராஜேஷ் மட்டும் கதைக்கும் கதாபாத்திரத்திற்கும் முக்கியத்துவம் கொடுக்கும் விதமான படங்களை மட்டுமே அதிக அளவில் தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். அந்த வகையில் ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்துள்ள சொப்பன சுந்தரி திரைப்படம் அடுத்து வெளியாக இருக்கிறது. எப்போதும் தனது சோசியல் மீடியா பக்கத்தில் ஆக்டிவாக செயல்பட்டு வரும் ஐஸ்வர்யா ராஜேஷ் தனது படங்கள் குறித்த தகவல்களை வெளியிடுவதையும் ரசிகர்களின் கேள்விக்கு பதில் அளிப்பதையும் வாடிக்கையாக வைத்துள்ளார்.
இந்த நிலையில் இரண்டு தினங்களுக்கு முன்பு அவரது டுவிட்டர் கணக்கு ஹேக் செய்யப்பட்டு விட்டது என்று அவரது மக்கள் செய்தி தொடர்பாளர் ஒரு தகவலை வெளியிட்டார். மேலும் ஐஸ்வர்யா ராஜேஷின் கணக்கு மீண்டும் விரைவில் திரும்ப பெறப்படும் என்றும் அதுவரை அதில் வெளியாகும் பதிவுகளுக்கு ரசிகர்கள் பெரிய அளவில் முக்கியத்துவம் கொடுக்க வேண்டாம் என்றும் கேட்டுக் கொள்ளப்பட்டது.
இது குறித்து டுவிட்டர் உரிமையாளரான எலன் மாஸ்க்கிற்கும் புகார் ஒன்றை அனுப்பி, ஐஸ்வர்யா ராஜேஷின் டுவிட்டர் கணக்கை விரைவில் மீட்டு தந்தால் நன்றாக இருக்கும் என்று வேண்டுகோளும் வைத்திருந்தனர். இந்த நிலையில் அடுத்த நாளே ஹேக் செய்யப்பட்ட தனது டுவிட்டர் கணக்கு தன்வசம் வந்து விட்டதாக கூறி தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார் ஐஸ்வர்யா ராஜேஷ்.