சிரஞ்சீவி 157வது படப்பிடிப்பில் இணைந்த நயன்தாரா | கர்ப்பமாக இருக்கும் கியாரா அத்வானிக்காக டாக்ஸிக் படப்பிடிப்பை மும்பைக்கு மாற்றிய யஷ் | விடாமல் துரத்திய போட்டோகிராபர்கள் : கோபமான சமந்தா | காந்தாரா 2 படப்பிடிப்பில் படகு விபத்து நடந்ததா? : தயாரிப்பாளர் தரப்பு விளக்கம் | “மஞ்சுவாரியரை அறிமுகப்படுத்த அவரது தந்தை என்னிடம் வாய்ப்பு கேட்டார்” : நெகிழ்ந்த ஊர்வசி | ஆதங்கப்பட்ட அனுபமா பரமேஸ்வரன்... : சமாதானப்படுத்திய சுரேஷ் கோபி | நடிகை காவ்யா மாதவனின் தந்தை காலமானார் | 39வது பிறந்தநாள் கொண்டாடிய அஞ்சலி | அரசியல் என்ட்ரி : இளம் நடிகை அனந்திகாவின் ஆசை | அடுத்தடுத்து மூன்று பான் இந்தியா படங்களின் முன்னோட்ட வீடியோ போட்டி |
பாலிவுட் சினிமாவில் முன்னணி கதாநாயகர்களில் ஒருவர் அக்ஷய் குமார். இவரது நடிப்பில் கடைசியாக வெளியான 5 படங்கள் எதும் வெற்றியை பெறவில்லை. தற்போது இவர் சூரரைப்போற்று ஹிந்தி ரீ-மேக்கில் நடிக்கிறார். மேலும் 'படே மியான் சோட் மியான்' படத்திலும் பிஸியாக நடித்து வருகிறார். இந்த படத்தில் டைகர் ஷெராப், பிருதிவிராஜ், சோனாக்சி சின்ஹா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கிறார்கள்.
இந்த படத்தின் படப்பிடிப்பு ஸ்காட்லாந்தில் விறுவிறுப்பாக நடக்கிறது. இந்த நிலையில் அக்ஷய்குமார், டைகர் ஷெராப் ஆகியோர் நேருக்கு நேர் மோதும் பிரமாண்டமான சண்டை காட்சியொன்று படமாக்கப்பட்டது. இதில் டூப் நடிகரை பயன்படுத்துமாறு அக்ஷய்குமாரிடம் படக்குழு அறிவுறுத்தியுள்ளார்கள். ஆனால் அவர் பிடிவாதமாக மறுத்து விட்டார். இதைதொடர்ந்து சண்டை காட்சியின் போது அக்ஷய்குமாருக்கு பலத்த அடிபட்டு முழங்காலில் காயம் ஏற்பட்டு ரத்தம் கொட்டியுள்ளது. உடனடியாக அவருக்கு முதலுதவி சிகிச்சைகள் அளிக்கப்பட்டுள்ளன. அதனால் தற்போது படப்பிடிப்பு நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளது.