தமிழில் வெளியாகும் ஹாலிவுட் அனிமேஷன் படம் | திருமண ஆசை காட்டி மோசடி : சின்னத்திரை நடிகை ரிகானா மீது போலீசில் புகார் | நடிகர் ஆர்யா உணவகங்களில் வருமான வரித்துறை சோதனை | சிரஞ்சீவி 157வது படப்பிடிப்பில் இணைந்த நயன்தாரா | கர்ப்பமாக இருக்கும் கியாரா அத்வானிக்காக டாக்ஸிக் படப்பிடிப்பை மும்பைக்கு மாற்றிய யஷ் | விடாமல் துரத்திய போட்டோகிராபர்கள் : கோபமான சமந்தா | காந்தாரா 2 படப்பிடிப்பில் படகு விபத்து நடந்ததா? : தயாரிப்பாளர் தரப்பு விளக்கம் | “மஞ்சுவாரியரை அறிமுகப்படுத்த அவரது தந்தை என்னிடம் வாய்ப்பு கேட்டார்” : நெகிழ்ந்த ஊர்வசி | ஆதங்கப்பட்ட அனுபமா பரமேஸ்வரன்... : சமாதானப்படுத்திய சுரேஷ் கோபி | நடிகை காவ்யா மாதவனின் தந்தை காலமானார் |
ராஜமவுலி இயக்கத்தில், கீரவாணி இசையமைப்பில், ஜுனியர் என்டிஆர், ராம்சரண், ஆலியா பட், அஜய் தேவ்கன் மற்றும் பலர் நடித்து கடந்த வருடம் வெளியான படம் 'ஆர்ஆர்ஆர்'. அப்படம் வெளியாகி இன்றுடன் ஓர் ஆண்டு நிறைவடைந்துள்ளது.
படம் வெளியாகி ஒரு ஆண்டு நிறைவடைந்ததை படக்குழுவினர் மறந்துவிட்டார்கள் போலிருக்கிறது. படத்தின் தயாரிப்பு நிறுவனம் தவிர படத்தின் இயக்குனர் ராஜமவுலி, ஜுனியர் என்டிஆர், ராம் சரண் என படம் சம்பந்தப்பட்ட யாருமே அது குறித்து சமூக வலைத்தளங்களில் எந்த ஒரு பதிவையும் போடவில்லை.
ஆர்ஆர்ஆர் பட தயாரிப்பு நிறுவனமான டிவிவி, தங்களது டுவிட்டரில், ஆர்ஆர்ஆர் படம் இதுவரை வாங்கிய ஆஸ்கர், கோல்டன் குளோப் உள்ளிட்ட பல விருதுகளையும் குறிப்பிட்டு ஒரு போஸ்டராக வெளியிட்டுள்ளனர். மேலும், ‛‛ஆர்ஆர்ஆர் படம் வெளியாகி ஒரு வருடம் ஆகியும் இன்னும் உலகில் எங்காவது திரையரங்குகளில் ஹவுஸ்புல்களை பெற்று ஓடிக்கொண்டிருக்கிறது. எல்லா விருதுகளையும் விட இந்த உணர்வு பெரியது. நீங்கள் பொழிந்த அன்பிற்கு நாங்கள் நன்றி சொல்ல முடியாது'' என தெரிவித்துள்ளனர்.
சிறந்த ஒரிஜனல் பாடலுக்கான ஆஸ்கர் விருதை இந்தப் படத்தில் இடம் பெற்ற 'நாட்டு நாட்டு' பாடல் பெற்றது. ஆஸ்கர் விருது வாங்கிய சமயத்தில் தொடர்ந்து பல்வேறு பதிவுகளைப் பதிவிட்ட ராஜமவுலி உள்ளிட்டோர் இப்போது எதுவும் போடாதது ஆச்சரியமாக உள்ளது. எல்லோரும் அவர்களது அடுத்தடுத்த வேலைகளில் பிஸியாகிவிட்டார்கள்.