ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
சிவகார்த்திகேயன் நடித்து வந்த மாவீரன் படப்பிடிப்பு முடிவடைந்து தற்போது இறுதி கட்டப் பணிகள் தொடங்கி உள்ளன. அதிதி ஷங்கர் நாயகியாக நடித்துள்ள இந்த படத்தில் மிஷ்கின் வில்லனாக நடித்திருக்கிறார். இதையடுத்து கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் தயாரிக்கும் படத்தில் நடிக்க போகிறார் சிவகார்த்திகேயன். அவரது 21 வது படமான இதை ராஜ்குமார் பெரியசாமி இயக்க, சாய் பல்லவி நாயகியாக நடிக்கிறார்.
இந்த படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பை காஷ்மீரில் நடத்த திட்டமிட்டுள்ளனர். தற்போது விஜய்யின் லியோ படத்திற்காக காஷ்மீரில் படப்பிடிப்பு நடத்திவிட்டு சென்னை திரும்பியுள்ள அப்படத்தின் இயக்குனர் லோகேஷ் கனகராஜை சந்தித்து அங்குள்ள வெப்பநிலை மற்றும் படப்பிடிப்பு நடத்துவதற்கு ஏதுவான சூழல் ஆகியவை குறித்து கருத்து கேட்க திட்டமிட்டுள்ளார்கள். அவர்கள் கூறும் தகவலை பொருத்தே சிவகார்த்திகேயனின் 21வது படப்பிடிப்பை உடனடியாக காஷ்மீரில் நடத்துவதா? இல்லை சற்று கால தாமதம் செய்து நடத்துவதா? என்பது குறித்து இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி முடிவு எடுப்பார் என்றும் தகவல்கள் வெளியாகி உள்ளன.