ஜி.வி.பிரகாஷின் ‛ஹேப்பி ராஜ்' படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்ட துல்கர் சல்மான்! | என்னைப் பற்றி மாதம் ஒரு வதந்தியை பரப்புகிறார்கள்! கோபத்தை வெளிப்படுத்திய மீனாட்சி சவுத்ரி | திருமண கோலத்தில் அம்மாவுடன் எடுத்துக் கொண்ட நெகிழ்ச்சி புகைப்படத்தை வெளியிட்ட சமந்தா! | சூர்யா 47வது படத்தின் பூஜையுடன் அறிவிப்பு! | பிளாஷ்பேக்: இரண்டு முறை திரைப்பட வடிவம் பெற்ற மேடை நாடகம் “குமஸ்தாவின் பெண்” | சூர்யா, கார்த்தி உடன் பணிப்புரிந்தது குறித்து கீர்த்தி ஷெட்டி! | ரீ ரிலீஸ் ஆகும் தனுஷின் ‛தேவதையை கண்டேன்' | ‛அகண்டா 2' படத்திற்காக தியாகம் செய்த பாலகிருஷ்ணா, போயப்பட்டி ஸ்ரீனு! | ‛தூரான்தர்' படத்தின் வசூல் நிலவரம்! | ‛திரிஷ்யம் 3' படத்தின் வியாபாரம் குறித்து புதிய அப்டேட்! |

தெலுங்கு முன்னணி நடிகர் அல்லு அர்ஜுன் கடந்த 2010-ல் நடித்து வெளியான படம் வருடு. குணசேகர் இயக்கிய இந்த படத்தில் கதாநாயகியாக பானு ஸ்ரீ மெஹ்ரா என்பவர் நடித்திருந்தார். இவர் டுவிட்டரில் அல்லு அர்ஜுன் பக்கத்தை பின்தொடர்ந்து வருகிறார். இந்த நிலையில் அல்லு அர்ஜுன் திடீரென இவரது டுவிட்டர் கணக்கை தன்னை பின் தொடர்வதில் இருந்து பிளாக் செய்தார்.
இதனால் அதிர்ச்சியான பானு ஸ்ரீ இது குறித்து தனது டுவிட்டர் பதிவில் கூறும்போது, “நான் யார் என்று நினைத்து குழம்ப வேண்டாம்.. அல்லு அர்ஜுனுடன் வருடு படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்திருந்தேன்.. அதன்பிறகு எனக்கு இப்போதுவரை பெரிய அளவில் பட வாய்ப்புகள் கிடைக்கவில்லை. ஆனாலும் என்னுடைய போராட்டங்களில் இருந்து நகைச்சுவையாக இருப்பது எப்படி என கற்றுக் கொண்டேன். இதோ இப்போது அல்லு அர்ஜுன் கூட என்னை அவரது டுவிட்டரில் பின்தொடர முடியாமல் பிளாக் செய்துள்ளார்” என்று விரக்தியுடன் குறிப்பிட்டிருந்தார்.
ஆனால் அப்படி பிளாக் செய்த மூன்று மணி நேரத்திலேயே மீண்டும் பானு ஸ்ரீ தன்னை பாலோ செய்யும் விதமாக அன்பிளாக் செய்து விட்டார் அல்லு அர்ஜுன். ஆனால் அதற்குள் அவரைப்பற்றி தவறாக பேசி விட்டோமே என உணர்ந்த பானு ஸ்ரீ உடனே மீண்டும் தனது டுவிட்டர் பக்கத்தில், “கிரேட் நியூஸ்.. அல்லு அர்ஜுன் என்னை அன் பிளாக் செய்துவிட்டார்.. எனக்கு பட வாய்ப்புகள் கிடைக்கவில்லை என்கிற அர்த்தத்தில் அவரை நான் தவறாக எதுவும் பேசவில்லை. என்னுடைய போராட்டத்தில் இப்போதும் நகைச்சுவைகளை கண்டுகொண்டு இன்னும் முன்னோக்கி செல்லவே முயற்சித்து வருகிறேன். எதையும் ஸ்போர்ட்டிவாக எடுத்துக் கொண்ட அல்லு அர்ஜுனுக்கு நன்றி” என்று கூறி சமாளித்துள்ளார்.