யுவன் இசையில் 'கேங்ஸ் ஆப் கோதாவரி' தெலுங்குப் படம் | இரண்டு தயாரிப்பாளர்களால் கமல்ஹாசனுக்கு நெருக்கடி | நான் பணம் கேட்டேனா... ஏமாந்துராதீங்க... : எச்சரிக்கும் சிங்கம் புலி | 19ம் நூற்றாண்டு கதையில் நடிக்கும் விஜய் தேவரகொண்டா | சம்பளத்தை உயர்த்திய அனுபமா பரமேஸ்வரன் | அஜித்தின் குட் பேட் அக்லி படப்பிடிப்பு துவங்கியது | திருமுருகன் கொடுத்த சர்ப்ரைஸ் : பாண்டி கமல் நெகிழ்ச்சி | தலைமை செயலகத்தில் நுழைவதற்காக முற்றிலும் புதிதாக மாறிய ஸ்ரேயா ரெட்டி | மாரி 2 படத்துக்கு பின் தமிழில் நடிக்காதது ஏன் ? - டொவினோ தாமஸ் விளக்கம் | பிரபாஸ் ஒதுக்கிய வாய்ப்பால் கிடுகிடு வளர்ச்சி அடைந்த அல்லு அர்ஜுன் |
2012ம் ஆண்டு வெளிவந்த 'ஒரு கல் ஒரு கண்ணாடி' படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானவர் உதயநிதி ஸ்டாலின். அதன் பிறகு சில பல படங்களில் கதாநாயகனாக நடித்திருந்தாலும் “மனிதன், சைக்கோ, நெஞ்சுக்கு நீதி, கலகத் தலைவன்” ஆகிய படங்கள் மட்டும்தான் குறிப்பிடத்தக்க விமர்சனங்களைப் பெற்ற படங்களாக அமைந்தது. மற்ற படங்கள் குறிப்பிடத்தக்க வரவேற்பைக் கூடப் பெறவில்லை.
உதயநிதி தமிழக விளையாட்டுத் துறை அமைச்சரான பின் வெளிவரும் படமாக நாளை(மார்ச் 17) வெளியாக உள்ள 'கண்ணை நம்பாதே' படம் இடம் பெற உள்ளது. இப்படத்தைக் கடந்த நான்கு ஆண்டுகளாக தயாரித்து வந்தனர். இப்படம் ஆரம்பமாகும் போது திமுக இளைஞரணி செயலாளராக மட்டுமே இருந்த உதயநிதி அதன்பின் சட்டசபை தேர்தலில் போட்டியிட்டு எம்எல்ஏ ஆகி, இப்படம் வெளியாகும் போது அமைச்சராகவும் ஆகிவிட்டார்.
ஒரு கிரைம் கதையாக எடுக்கப்பட்டுள்ள இந்தப் படத்தில் உதயநிதியுடன் பிரசன்னா, ஸ்ரீகாந்த் ஆகியோரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளார்கள். இந்தப் படத்திற்காக கடந்த ஒரு வாரமாக பல பேட்டிகளிலும் பங்கேற்றார். இந்தப் படத்தை அடுத்து உதயநிதி நடித்துள்ள கடைசி படமான 'மாமன்னன்' படம் கோடை விடுமுறையில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.