நில சர்ச்சை விவகாரம் : ஜூனியர் என்.டி.ஆர் விளக்கம் | மே 31ல் ரிலீஸாகும் ‛மல்ஹர்' திரைப்படம் | என் கதாபாத்திரங்களை அவர் ஸ்டைலில் அசத்தியிருக்கிறார் : பஹத் பாசிலுக்கு மம்முட்டி பாராட்டு | இயக்குனர்களுக்கு இணையான சம்பளம் ; டர்போ கதாசிரியர் வேண்டுகோள் | 'வீர தீர சூரன்' முதல் கட்டப் படப்பிடிப்பு நிறைவு | காதலித்த நடிகை விபத்தில் இறக்க : தற்கொலை செய்து கொண்ட நடிகர் | 'செப்' ஆனார் ஏஆர் ரஹ்மான் மகள் ரஹீமா | சிம்பு மீது புகார் : அண்ணன், தம்பி பிரச்னை என்கிறார் ஐசரி கணேஷ் | 'இந்தியன் 2' - புரமோஷன் இன்று ஆரம்பம் | ஜுனியர் என்டிஆருக்காக விட்டுக் கொடுத்த கரண் ஜோஹர் |
சிவா இயக்கத்தில் நடிகர் சூர்யா தற்போது தனது 42வது படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்திற்கு பிறகு இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில் உருவாகும் 'வாடிவாசல்' படத்தில் சூர்யா நடிக்கவுள்ளார். எழுத்தாளர் சி.சு.செல்லப்பா எழுதிய 'வாடிவாசல்' என்ற குறுநாவலை தழுவி உருவாக உள்ள இத்திரைப்படத்தை எஸ்.தாணு தயாரிக்கிறார். ஜி.வி பிரகாஷ் இசையமைக்கிறார். ஏற்கனவே இந்த படத்திற்காக காளைகளுடன் பயிற்சி எடுக்கும் ஒத்திகை காட்சி படப்பிடிப்பு நடைபெற்றது.
'வாடிவாசல்' கிராபிக்ஸ் பணிகளுக்காக அவதார் படத்திற்கு பணியாற்றிய வீடா டிஜிட்டல் நிறுவனம் பணியாற்றவுள்ளது. இந்நிலையில் வரும் ஜூன் மாதத்தில் இப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பை தொடங்கவுள்ளனர். இதற்காக சூர்யா வாரத்திற்கு ஒருமுறை இரண்டு காளைகளுடன் பயிற்சிகளில் ஈடுபட்டு வருகிறார் என கூறப்படுகிறது.