ஒரே மாதத்தில் திரைக்கு வரும் கிர்த்தி ஷெட்டியின் மூன்று படங்கள் | 100 பேர் வந்தாலும்....! பிரதீப் ரங்கநாதனின் 'டியூட்' படத்தின் டிரைலர் வெளியானது! | ஆனந்த்.எல்.ராய் இயக்கத்தில் இணையும் முன்னனி நடிகைகள் | இம்மாதத்தில் ஓடிடியில் வெளியாகும் 'லோகா, இட்லிகடை' | 500 கோடி வசூலை நோக்கி 'காந்தாரா சாப்டர் 1' | அரசன் படத்தின் புதிய அப்டேட் : சுதீப் இணைய வாய்ப்பு | சிவகார்த்திகேயன் உடன் இணையும் ஸ்ரீ லீலா | பைசன் படத்தின் தணிக்கை சான்று மற்றும் ‛ரன்னிங் டைம்' | நான் அசாம், தாய்மொழி நேபாளம் : கயாடு லோகர் புது தகவல் | பாபாஜி குகையில் ரஜினி தியானம், வழிபாடு |
கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் விக்னேஷ் சிவன் - நயன்தாரா தம்பதியர் வாடகைத்தாய் மூலம் இரட்டை குழந்தைகளை பெற்றெடுத்தார்கள். அதையடுத்து தங்கள் குழந்தைகளுடன் தாங்கள் எடுத்துக்கொண்ட புகைப்படங்களை அவ்வப்போது வெளியிட்டபோதும் அவர்களின் முகத்தை இதுவரை வெளி உலகிற்கு காண்பிக்காமல் இருந்து வருகிறார்கள்.
இந்நிலையில் அஜித்தின் 62வது படத்திலிருந்து விலகிய விக்னேஷ் சிவன் அதையடுத்து விஜய் சேதுபதி - அபிஷேக் பச்சனை வைத்து ஒரு பான் இந்தியா படத்தை இயக்கப் போவதாக கூறப்படுகிறது. கேங்ஸ்டர் கதையில் உருவாகும் இந்த படத்திற்காக பாலிவுட் எழுத்தாளர் ஒருவர் கதை எழுதி வருகிறாராம். அதன் காரணமாக தற்போது விக்னேஷ் சிவன் மும்பையில் முகாமிட்டு உள்ளாராம். அதேபோல் நயன்தாராவும் அட்லீ இயக்கத்தில் ஷாருக்கானுடன் நடிக்கும் ஜவான் படத்திற்காக மும்பையில் இருக்கிறார். இதன் காரணமாக இருவரும் தங்களது இரட்டை குழந்தைகளை மும்பைக்கு கொண்டு சென்று தங்களுடன் வைத்திருக்கிறார்கள்.
இந்த நிலையில் நயன்தாரா- விக்னேஷ் சிவன் ஆகியோர் மும்பை விமான நிலையத்திற்குள் தங்களது இரட்டை குழந்தைகளுடன் செல்லும் புகைப்படம் ஒன்று சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.