மோகன்லாலின் ஹிருதயபூர்வம் படத்துக்கு யு சான்றிதழ் | ‛காஞ்சனா 4' படத்திற்கு பிறகு தமிழ் சினிமாவில் என்னை தேடுவார்கள் : நோரா பதேஹி | ‛கஜினி' சிக்ஸ்பேக்கிற்கு அஜித் தான் காரணம் : ஏ.ஆர்.முருகதாஸ் தகவல் | சன்னி லியோன் நடித்த படத்தின் மூன்றாம் பாகத்தில் தமன்னா | ஜனநாயகன் இசை விழாவில் கலந்து கொள்ள ரஜினி, கமலுக்கு அழைப்பா? | '18 மைல்ஸ் தாரணா' : ‛பேச்சுலர்' இயக்குனரின் அடுத்த பட அப்டேட் | ராஜமவுலி, மகேஷ்பாபு படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிடும் ஜேம்ஸ் கேமரூன் | ‛ஆந்திரா கிங் தாலுக்' படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு! | விநாயகர் சதுர்த்தி படங்கள் வருவது சந்தேகம்? | 'மெட்ராஸ் மேட்னி' குழுவினரை அழைத்துப் பாராட்டிய சிவகார்த்திகேயன் |
கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் விக்னேஷ் சிவன் - நயன்தாரா தம்பதியர் வாடகைத்தாய் மூலம் இரட்டை குழந்தைகளை பெற்றெடுத்தார்கள். அதையடுத்து தங்கள் குழந்தைகளுடன் தாங்கள் எடுத்துக்கொண்ட புகைப்படங்களை அவ்வப்போது வெளியிட்டபோதும் அவர்களின் முகத்தை இதுவரை வெளி உலகிற்கு காண்பிக்காமல் இருந்து வருகிறார்கள்.
இந்நிலையில் அஜித்தின் 62வது படத்திலிருந்து விலகிய விக்னேஷ் சிவன் அதையடுத்து விஜய் சேதுபதி - அபிஷேக் பச்சனை வைத்து ஒரு பான் இந்தியா படத்தை இயக்கப் போவதாக கூறப்படுகிறது. கேங்ஸ்டர் கதையில் உருவாகும் இந்த படத்திற்காக பாலிவுட் எழுத்தாளர் ஒருவர் கதை எழுதி வருகிறாராம். அதன் காரணமாக தற்போது விக்னேஷ் சிவன் மும்பையில் முகாமிட்டு உள்ளாராம். அதேபோல் நயன்தாராவும் அட்லீ இயக்கத்தில் ஷாருக்கானுடன் நடிக்கும் ஜவான் படத்திற்காக மும்பையில் இருக்கிறார். இதன் காரணமாக இருவரும் தங்களது இரட்டை குழந்தைகளை மும்பைக்கு கொண்டு சென்று தங்களுடன் வைத்திருக்கிறார்கள்.
இந்த நிலையில் நயன்தாரா- விக்னேஷ் சிவன் ஆகியோர் மும்பை விமான நிலையத்திற்குள் தங்களது இரட்டை குழந்தைகளுடன் செல்லும் புகைப்படம் ஒன்று சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.