யுவன் இசையில் 'கேங்ஸ் ஆப் கோதாவரி' தெலுங்குப் படம் | இரண்டு தயாரிப்பாளர்களால் கமல்ஹாசனுக்கு நெருக்கடி | நான் பணம் கேட்டேனா... ஏமாந்துராதீங்க... : எச்சரிக்கும் சிங்கம் புலி | 19ம் நூற்றாண்டு கதையில் நடிக்கும் விஜய் தேவரகொண்டா | சம்பளத்தை உயர்த்திய அனுபமா பரமேஸ்வரன் | அஜித்தின் குட் பேட் அக்லி படப்பிடிப்பு துவங்கியது | திருமுருகன் கொடுத்த சர்ப்ரைஸ் : பாண்டி கமல் நெகிழ்ச்சி | தலைமை செயலகத்தில் நுழைவதற்காக முற்றிலும் புதிதாக மாறிய ஸ்ரேயா ரெட்டி | மாரி 2 படத்துக்கு பின் தமிழில் நடிக்காதது ஏன் ? - டொவினோ தாமஸ் விளக்கம் | பிரபாஸ் ஒதுக்கிய வாய்ப்பால் கிடுகிடு வளர்ச்சி அடைந்த அல்லு அர்ஜுன் |
கடந்த வருடம் கன்னடத்தில் வெளியாகி, கன்னடம் மட்டுமல்லாது தென்னிந்திய மொழிகளிலும் மிகப்பெரிய வரவேற்பு பெற்று பாலிவுட்டிலும் கவனத்தை ஈர்த்த படம் காந்தாரா. ரிஷப் ஷெட்டி இயக்கி கதாநாயகனாக நடித்திருந்த இந்த படத்தில் கதாநாயகியாக நடித்தவர் சப்தமி கவுடா. ஆதிவாசி இனத்தை சேர்ந்த காவல்துறையில் பணிபுரியும் ஒரு பெண்ணாக நடித்து ரசிகர்களின் வரவேற்பையும் பெற்றார். இந்த படத்தை தொடர்ந்து அவருக்கு பாலிவுட்டிலும் வாய்ப்பு தேடி வந்துள்ளது. இந்த நிலையில் கன்னட திரை உலகின் மறைந்த மூத்த நடிகர் ராஜ்குமாரின் பேரனும் நடிகர் ராகவேந்திரா ராஜகுமாரின் மகனுமான யுவா கிருஷ்ணா முதல்முறையாக கதாநாயகனாக அறிமுகமாகும் யுவா என்கிற படத்தில் அவருக்கு ஜோடியாக நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார் சப்தமி கவுடா.
சமீபத்தில் இந்த படத்திற்காக இவர்கள் இருவரையும் வைத்து போட்டோஷூட் நடத்தப்பட்டது. அந்தசமயம் கிரிக்கெட் கிரவுண்டில் விளையாடிக் கொண்டிருந்த சப்தமி கவுடா அங்கிருந்தபடியே நேராக தயாரிப்பு அலுவலகத்தில் சென்று போட்டோஷூட்டில் அதே உடையுடன் கலந்து கொண்டாராம். அதன் பிறகு மீண்டும் கிரிக்கெட் விளையாட மைதானத்திற்கு திரும்பிய சப்தமி கவுடாவுக்கு சில மணி நேரங்களிலேயே அவர் தேர்வாகி விட்டார் என சந்தோஷ செய்தியும் தேடி வந்ததாம்.
“நீண்ட நாளைக்கு என்னை காந்தாரா படத்தின் லீலா கதாபாத்திரமாகவே இருக்க முடியாது, எனக்குள் இன்னும் பல கதாபாத்திரங்கள் ஒளிந்துள்ளன அவற்றை ஒவ்வொன்றாக வெளிப்படுத்த போகிறேன்” என்று கூறியுள்ளார் சப்தமி கவுடா.
காந்தாரா படத்தை தயாரித்த ஹோம்பலே பிக்சர்ஸ் நிறுவனம் தான் இந்த படத்தையும் தயாரிக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.