மோகன்லாலின் ஹிருதயபூர்வம் படத்துக்கு யு சான்றிதழ் | ‛காஞ்சனா 4' படத்திற்கு பிறகு தமிழ் சினிமாவில் என்னை தேடுவார்கள் : நோரா பதேஹி | ‛கஜினி' சிக்ஸ்பேக்கிற்கு அஜித் தான் காரணம் : ஏ.ஆர்.முருகதாஸ் தகவல் | சன்னி லியோன் நடித்த படத்தின் மூன்றாம் பாகத்தில் தமன்னா | ஜனநாயகன் இசை விழாவில் கலந்து கொள்ள ரஜினி, கமலுக்கு அழைப்பா? | '18 மைல்ஸ் தாரணா' : ‛பேச்சுலர்' இயக்குனரின் அடுத்த பட அப்டேட் | ராஜமவுலி, மகேஷ்பாபு படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிடும் ஜேம்ஸ் கேமரூன் | ‛ஆந்திரா கிங் தாலுக்' படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு! | விநாயகர் சதுர்த்தி படங்கள் வருவது சந்தேகம்? | 'மெட்ராஸ் மேட்னி' குழுவினரை அழைத்துப் பாராட்டிய சிவகார்த்திகேயன் |
தயாரிப்பாளர் வி. ஏ. துரை நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டு மருத்துவ சிகிச்சைக்கு பணமில்லாமல் அவதிப்பட்டு வருகிறார். என்னம்மா கண்ணு, பிதாமகன், லூட்டி, கஜேந்திரா உள்ளிட்ட பல படங்களை தயாரித்தவர் தயாரிப்பாளர் வி.ஏ.துரை. ரஜினியின் பாபா படத்தில் தயாரிப்பு நிர்வாகியாக பணியாற்றியவர். மனைவி, மகளை பிரிந்து வாழும் அவர் தற்போது விருகம்பாக்கத்தில் உள்ள வீடு ஒன்றில் தனியாக வசித்து வருகிறார்.
இயக்குநர் எஸ்.பி.முத்துராமன் உதவியால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பிய அவர் எழுந்து உட்காரும் அளவிற்கு உடல்நலம் தேறியிருக்கிறார். ஆனால் தற்போது அன்றாட மருத்துவ செலவுகளுக்கே பணமில்லாமல் தவித்து வருகிறார். சமீபத்தில் அவருக்கு நடிகர் சூர்யா ரூ 2 லட்சம் பணம் கொடுத்து உதவியதாக தகவல் வெளியானது. அதேபோல நடிகர் கருணாஸ் ரூ 50 ஆயிரம் பணம் கொடுத்து உதவியுள்ளார்.
இந்நிலையில் நடிகர் ரஜினிகாந்த் அவரை போனில் தொடர்பு கொண்டு "நீங்கள் எதை பற்றியும் கவலைப்படாதிருங்கள். மொத்த செலவையும் நான் பார்த்து கொள்கிறேன். ஜெயிலர் படத்தை முடித்ததும் நேரில் வந்து பார்க்கிறேன்'' என உறுதி அளித்துள்ளாராம். இந்த செய்தி தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.