மோகன்லாலின் ஹிருதயபூர்வம் படத்துக்கு யு சான்றிதழ் | ‛காஞ்சனா 4' படத்திற்கு பிறகு தமிழ் சினிமாவில் என்னை தேடுவார்கள் : நோரா பதேஹி | ‛கஜினி' சிக்ஸ்பேக்கிற்கு அஜித் தான் காரணம் : ஏ.ஆர்.முருகதாஸ் தகவல் | சன்னி லியோன் நடித்த படத்தின் மூன்றாம் பாகத்தில் தமன்னா | ஜனநாயகன் இசை விழாவில் கலந்து கொள்ள ரஜினி, கமலுக்கு அழைப்பா? | '18 மைல்ஸ் தாரணா' : ‛பேச்சுலர்' இயக்குனரின் அடுத்த பட அப்டேட் | ராஜமவுலி, மகேஷ்பாபு படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிடும் ஜேம்ஸ் கேமரூன் | ‛ஆந்திரா கிங் தாலுக்' படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு! | விநாயகர் சதுர்த்தி படங்கள் வருவது சந்தேகம்? | 'மெட்ராஸ் மேட்னி' குழுவினரை அழைத்துப் பாராட்டிய சிவகார்த்திகேயன் |
சமீபத்தில் தெலுங்கு திரையுலகின் கவனிக்கத்தக்க சில இயக்குனர்களான வெங்கடேஷ் மகா, நந்தினி ரெட்டி, இந்திராகாந்தி மோகன கிருஷ்ணா, சிவா நிர்வானா மற்றும் விவேக் ஆத்ரேயா ஆகியோர் ஒன்று கூடி சினிமா குறித்து பொதுவான விவாதம் ஒன்றை நடத்தினார்கள். அதில் இயக்குனர் வெங்கடேஷ் மகா பேசும்போது கே ஜி எப் படத்தில் கதாநாயகனாக நடித்த யஷ்ஷின் ராக்கி பாய் கதாபாத்திரம் உருவாக்கம் குறித்து தனது விமர்சனங்களை கிண்டலடிக்கும் தொனியில் பகிர்ந்து கொண்டார். அங்கே இருந்த மற்ற இயக்குனர்களும் அவரது விமர்சனத்தை கேட்டு வாய்விட்டு சிரித்தனர். இந்த வீடியோ சமீபத்தில் சோசியல் மீடியாவில் வைரலாக பரவியது.
இதனைத் தொடர்ந்து யஷ் ரசிகர்கள் மட்டுமல்லாமல் பொதுவான கன்னட ரசிகர்களும் இயக்குனர் வெங்கடேஷ் மகாவிற்கு சோஷியல் மீடியா மூலமாக தங்களது கண்டனங்களை தெரிவித்து வருவதுடன் அவர் தனது விமர்சனத்திற்காக மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் வலியுறுத்தி வருகின்றனர். இன்னும் பல ரசிகர்கள் அநாகரிகமான வார்த்தைகளால் அவரை வசைபாடி வருகின்றனர். இந்த நிலையில் தன்னுடைய விமர்சனம் இப்படி விவகாரமாக மாறும் என எதிர்பார்க்காத இயக்குனர் வெங்கடேஷ் மகா தான் பேசியது குறித்து வருத்தம் தெரிவித்து வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அந்த வீடியோவில், தான் கேஜிஎப் படத்தில் யஷ்ஷின் கதாபாத்திரம் குறித்து கூறிய கருத்துக்களில் இருந்து ஒருபோதும் பின்வாங்க போவதில்லை என்றும் அதேசமயம் நான் அந்த கருத்தை சொன்ன விதம் சரியில்லை என்பதால் அதற்காக மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன் என்றும் கூறியுள்ளார். ஒரு இயக்குனராக, ஒரு படைப்பாளியாக. என்னுடைய கருத்தை கூறினே தவிர யாரையும், எந்த மொழி சினிமாவையும் புண்படுத்த வேண்டும் என்கிற உள்நோக்கத்துடன் பேசவில்லை என்றும் விளக்கம் அளித்துள்ளார் இயக்குனர் வெங்கடேஷ் மகா.