நான் கார்த்தியின் தீவிர ரசிகை : கிர்த்தி ஷெட்டி | இன்னும் 50 நாள் : பராசக்தி புதிய போஸ்டர் வெளியீடு | ஆர்யன் படம் வருகிற 28-ல் நெட்பிளிக்சில் வெளியாகிறது | ஜாய் கிறிஸ்டில்லாவுக்கு எதிராக மாதம்பட்டி ரங்கராஜ் தொடுத்த வழக்கை தள்ளுபடி செய்த நீதிமன்றம் | சிம்பு கதையில் ரஜினியா... | ஆண் பாவத்திற்கு பொல்லாதது பின் தமிழ் சினிமா நிலைமை பாவம் | அது நானில்லை : ரகுல் ப்ரீத் சிங் எச்சரிக்கை | தன் பட பூஜையை அர்ஜூன் தாஸ் புறக்கணித்தாரா? | தமிழில் மெலோடி பாடல்கள் குறைந்தது ஏன்?: கங்கை அமரன் | ஹிந்தியில் மீண்டும் தடம் பதிப்பாரா தனுஷ்? |

மணிரத்னம் இயக்கத்தில் விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, ஐஸ்வர்யா ராய், திரிஷா உட்பட பல நடிப்பில் உருவாகி உள்ள படம் பொன்னியின் செல்வன். இந்த படத்தின் முதல் பாகம் ஏற்கனவே வெளியாகிவிட்ட நிலையில் அடுத்து இரண்டாம் பாகம் ஏப்ரல் 28ம் தேதி திரைக்கு வருகிறது. இந்நிலையில் பொன்னியின் செல்வன் படத்தின் முதல் பாகத்தைப் போலவே இரண்டாம் பாகத்தின் இசை வெளியீட்டு விழாவையும் இம்மாதம் 29ம் தேதி சென்னையில் உள்ள நேரு உள் விளையாட்டு அரங்கில் பிரமாண்டமாக நடத்தப்போகிறார்கள்.
இப்படத்தின் முதல் பாக இசை விழாவில் ரஜினி - கமல் கலந்து கொண்ட நிலையில் இந்த இரண்டாம் பாகத்தின் இசை விழாவிலும் ரஜினியும், கமலும் பங்கேற்க உள்ளார்கள். மேலும் ஏப்ரல் மாதம் முதல் வாரத்தில் பொன்னியின் செல்வன் படக்குழு இந்தியா முழுக்க சென்று படத்தை விளம்பரப்படுத்தும் புரமோஷன் நிகழ்ச்சிகளில் பங்கேற்க உள்ளனர்.