விஜயகாந்த் மகனின் உருக்கமான ஆசை | கர்ப்பிணி பெண்களின் பேஷன் ஷோவில் கலந்து கொண்ட அமலாபால் | மம்முட்டியை இயக்கும் கவுதம் மேனன் | சிவகார்த்திகேயனை இயக்க தயாராகும் சிபி சக்ரவர்த்தி | எனக்கு பிடித்த இடம் : நயன்தாரா | 'கூலி' படப்பிடிப்புக்கு முன்பாக ரஜினிகாந்த் சிறு ஓய்வு ? | திருச்செந்தூர், கன்னியாகுமரி கோயில்களில் கணவருடன் நயன்தாரா வழிபாடு | புதுமுகங்களின் 'குற்றம் புதிது' | கன்னட ஹீரோ மீது கொடூர தாக்குதல் | சின்னத்திரை இயக்குனர்கள் சங்கத் தலைவராக மங்கை அரிராஜன் வெற்றி |
இன்றைக்கு தமிழ் சினிமாவில் நம்பர் 1 கதாநாயகனாக இருப்பவர் நடிகர் விஜய். அவரை இந்த சினிமா உலகிற்கு அழைத்து வந்தவர் அவருடைய தந்தை மற்றும் இயக்குனர் எஸ்.ஏ.சந்திரசேகர். அவர் ஒரு கட்டத்தில் விஜய் அரசியலுக்கு வர வேண்டும் என்று ஆர்வத்தில் ஒரு சில செயல்கள் செய்துள்ளார். அதில் விஜய்க்கு உடன்பாடு இல்லாததால் தந்தை, மகன் உறவில் விரிசல் ஏற்பட்டது .
இந்நிலையில் திருவண்ணாமலை மாவட்டம், ஆரணியில் உள்ள புத்திர காமேட்டீஸ்வரர் கோயிலுக்கு இயக்குநர் எஸ்.ஏ.சந்திரசேகர் சமீபத்தில் சாமி தரிசனம் செய்ய வந்துள்ளார். இது குறித்து தகவல் தெரிந்ததும், ஏராளமான செய்தியாளர்கள் கோயிலின் முன்பு குவிந்துள்ளனர்.
அப்போது செய்தியாளர் ஒருவர், விஜய் அரசியலுக்கு வருவாரா எனக் கேட்டுள்ளார்? உடனே அதற்கு எஸ்.ஏ.சந்திரசேகர் விஜய் குறித்த கேள்விகளை அவரிடமே கேளுங்கள் என ஒரு வரியில் கூறியுள்ளார். அப்பா மகன் இடையே இன்னும் மனஸ்தாபம் தீரவில்லை என்று சமூக வலைதளங்களில் பரவலாக பேசப்படுகிறது.