நான் கார்த்தியின் தீவிர ரசிகை : கிர்த்தி ஷெட்டி | இன்னும் 50 நாள் : பராசக்தி புதிய போஸ்டர் வெளியீடு | ஆர்யன் படம் வருகிற 28-ல் நெட்பிளிக்சில் வெளியாகிறது | ஜாய் கிறிஸ்டில்லாவுக்கு எதிராக மாதம்பட்டி ரங்கராஜ் தொடுத்த வழக்கை தள்ளுபடி செய்த நீதிமன்றம் | சிம்பு கதையில் ரஜினியா... | ஆண் பாவத்திற்கு பொல்லாதது பின் தமிழ் சினிமா நிலைமை பாவம் | அது நானில்லை : ரகுல் ப்ரீத் சிங் எச்சரிக்கை | தன் பட பூஜையை அர்ஜூன் தாஸ் புறக்கணித்தாரா? | தமிழில் மெலோடி பாடல்கள் குறைந்தது ஏன்?: கங்கை அமரன் | ஹிந்தியில் மீண்டும் தடம் பதிப்பாரா தனுஷ்? |

சமீபத்தில் மலையாளத்தில் வெளியான நண்பகல் நேரத்து மயக்கம் என்கிற படத்தில் எளிய கிராமத்து மனிதராக நடித்து அனைவரையும் ஆச்சரியப்படுத்தினார் நடிகர் மம்முட்டி. இதைத்தொடர்ந்து அடுத்ததாக ஜோதிகாவுடன் அவர் இணைந்து நடித்துள்ள ‛காதல் தி கோர்' என்கிற படம் ரிலீஸுக்கு தயாராகி வருகிறது. இந்த படத்தில் அரசியல்வாதி கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் மம்முட்டி. இதைத்தொடர்ந்து உருவாகிவரும் ‛கண்ணூர் ஸ்குவாட்' என்கிற படத்தில் துப்பறியும் போலீசு அதிகாரியாக தற்போது நடித்து வருகிறார்.
இந்த படத்தின் படப்பிடிப்பு கடந்த சில நாட்களாக புனே நகரத்திற்கு அருகில் உள்ள பகுதிகளில் தொடர்ந்து படமாக்கப்பட்டு வருகிறது. குறிப்பாக ஒவ்வொரு இரண்டு மணி நேரத்திற்கும் ஒவ்வொரு லொக்கேஷனை மாற்றி மாற்றி படப்பிடிப்பை நடத்தி வருகின்றனர் படக்குழுவினர். போலீஸ் அதிகாரியான மம்முட்டி ஒரு வழக்கு தொடர்பாக தனது விசாரணையை இந்த பகுதிகளில் வெவ்வேறு இடங்களில் மேற்கொள்கிறார் என்பது போன்று கதை நகர்வதால் இப்படி அடிக்கடி வெவ்வேறு லொகேஷனை மாற்றி காட்சிகளை படமாக்கி வருகிறார்கள் என்று சொல்லப்படுகிறது.