மோகன்லாலின் ஹிருதயபூர்வம் படத்துக்கு யு சான்றிதழ் | ‛காஞ்சனா 4' படத்திற்கு பிறகு தமிழ் சினிமாவில் என்னை தேடுவார்கள் : நோரா பதேஹி | ‛கஜினி' சிக்ஸ்பேக்கிற்கு அஜித் தான் காரணம் : ஏ.ஆர்.முருகதாஸ் தகவல் | சன்னி லியோன் நடித்த படத்தின் மூன்றாம் பாகத்தில் தமன்னா | ஜனநாயகன் இசை விழாவில் கலந்து கொள்ள ரஜினி, கமலுக்கு அழைப்பா? | '18 மைல்ஸ் தாரணா' : ‛பேச்சுலர்' இயக்குனரின் அடுத்த பட அப்டேட் | ராஜமவுலி, மகேஷ்பாபு படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிடும் ஜேம்ஸ் கேமரூன் | ‛ஆந்திரா கிங் தாலுக்' படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு! | விநாயகர் சதுர்த்தி படங்கள் வருவது சந்தேகம்? | 'மெட்ராஸ் மேட்னி' குழுவினரை அழைத்துப் பாராட்டிய சிவகார்த்திகேயன் |
சமீபத்தில் மலையாளத்தில் வெளியான நண்பகல் நேரத்து மயக்கம் என்கிற படத்தில் எளிய கிராமத்து மனிதராக நடித்து அனைவரையும் ஆச்சரியப்படுத்தினார் நடிகர் மம்முட்டி. இதைத்தொடர்ந்து அடுத்ததாக ஜோதிகாவுடன் அவர் இணைந்து நடித்துள்ள ‛காதல் தி கோர்' என்கிற படம் ரிலீஸுக்கு தயாராகி வருகிறது. இந்த படத்தில் அரசியல்வாதி கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் மம்முட்டி. இதைத்தொடர்ந்து உருவாகிவரும் ‛கண்ணூர் ஸ்குவாட்' என்கிற படத்தில் துப்பறியும் போலீசு அதிகாரியாக தற்போது நடித்து வருகிறார்.
இந்த படத்தின் படப்பிடிப்பு கடந்த சில நாட்களாக புனே நகரத்திற்கு அருகில் உள்ள பகுதிகளில் தொடர்ந்து படமாக்கப்பட்டு வருகிறது. குறிப்பாக ஒவ்வொரு இரண்டு மணி நேரத்திற்கும் ஒவ்வொரு லொக்கேஷனை மாற்றி மாற்றி படப்பிடிப்பை நடத்தி வருகின்றனர் படக்குழுவினர். போலீஸ் அதிகாரியான மம்முட்டி ஒரு வழக்கு தொடர்பாக தனது விசாரணையை இந்த பகுதிகளில் வெவ்வேறு இடங்களில் மேற்கொள்கிறார் என்பது போன்று கதை நகர்வதால் இப்படி அடிக்கடி வெவ்வேறு லொகேஷனை மாற்றி காட்சிகளை படமாக்கி வருகிறார்கள் என்று சொல்லப்படுகிறது.