நேரடியாக ஓடிடியில் வெளியாகும் கீர்த்தி சுரேஷ் படம் | 22 ஆண்டு காத்திருப்பு : விஷ்ணு மஞ்சு நெகிழ்ச்சி | யாருக்கு யார் வில்லன்? மோகன்லால் மோகன்பாபு போட்டாபோட்டி | மருத்துவர்களின் அலட்சியத்தால் செல்லப்பூனை மரணம் ; திலீப் பட இயக்குனர் போலீசில் புகார் | லண்டனில் கங்குலியுடன் சந்திப்பு ; பிரமித்து விலகாத நவ்யா நாயர் | குபேராவை கேரளாவில் வெளியிடும் துல்கர் சல்மான் | 'தொடரும்' படத்தின் கதை என்னுடையது ; வில்லங்க இயக்குனரின் புதிய சர்ச்சை | 'தி ராஜா சாப்' டீசர் : ஹிந்தி, தெலுங்கு பார்வைகளில் போட்டி | மைனா நந்தினியின் 'குட் டே' | உறுப்பினர் அட்டை இல்லாமல் சினிமாவில் நடிக்க முடியாது : விஷால் அறிக்கை |
சமீபத்தில் மலையாளத்தில் வெளியான நண்பகல் நேரத்து மயக்கம் என்கிற படத்தில் எளிய கிராமத்து மனிதராக நடித்து அனைவரையும் ஆச்சரியப்படுத்தினார் நடிகர் மம்முட்டி. இதைத்தொடர்ந்து அடுத்ததாக ஜோதிகாவுடன் அவர் இணைந்து நடித்துள்ள ‛காதல் தி கோர்' என்கிற படம் ரிலீஸுக்கு தயாராகி வருகிறது. இந்த படத்தில் அரசியல்வாதி கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் மம்முட்டி. இதைத்தொடர்ந்து உருவாகிவரும் ‛கண்ணூர் ஸ்குவாட்' என்கிற படத்தில் துப்பறியும் போலீசு அதிகாரியாக தற்போது நடித்து வருகிறார்.
இந்த படத்தின் படப்பிடிப்பு கடந்த சில நாட்களாக புனே நகரத்திற்கு அருகில் உள்ள பகுதிகளில் தொடர்ந்து படமாக்கப்பட்டு வருகிறது. குறிப்பாக ஒவ்வொரு இரண்டு மணி நேரத்திற்கும் ஒவ்வொரு லொக்கேஷனை மாற்றி மாற்றி படப்பிடிப்பை நடத்தி வருகின்றனர் படக்குழுவினர். போலீஸ் அதிகாரியான மம்முட்டி ஒரு வழக்கு தொடர்பாக தனது விசாரணையை இந்த பகுதிகளில் வெவ்வேறு இடங்களில் மேற்கொள்கிறார் என்பது போன்று கதை நகர்வதால் இப்படி அடிக்கடி வெவ்வேறு லொகேஷனை மாற்றி காட்சிகளை படமாக்கி வருகிறார்கள் என்று சொல்லப்படுகிறது.