அதர்வாவுக்கு ஜோடியாக நடிக்கும் சோஷியல் மீடியா பிரபலம் | ராதிகாவுக்கு காலில் என்னாச்சு : நேரில் நலம் விசாரித்த சிவகுமார் | அல்லு அர்ஜுன் - சிரஞ்சீவி குடும்பத்தினர் மோதல் ? | நில சர்ச்சை விவகாரம் : ஜூனியர் என்.டி.ஆர் விளக்கம் | மே 31ல் ரிலீஸாகும் ‛மல்ஹர்' திரைப்படம் | என் கதாபாத்திரங்களை அவர் ஸ்டைலில் அசத்தியிருக்கிறார் : பஹத் பாசிலுக்கு மம்முட்டி பாராட்டு | இயக்குனர்களுக்கு இணையான சம்பளம் ; டர்போ கதாசிரியர் வேண்டுகோள் | 'வீர தீர சூரன்' முதல் கட்டப் படப்பிடிப்பு நிறைவு | காதலித்த நடிகை விபத்தில் இறக்க : தற்கொலை செய்து கொண்ட நடிகர் | 'செப்' ஆனார் ஏஆர் ரஹ்மான் மகள் ரஹீமா |
மலையாள தயாரிப்பாளர் சிஜூ தமீன்ஸ் தயாரிக்கும் தமிழ் படம் 'மெமரீஸ்'. இதனை மலையாள இயக்குனர்களிடம் உதவி இயக்குனராக பணியாற்றிய ஷியாம் பர்வீன் இயக்குகிறார். மலையாள நடிகை பார்வதி அருண் கதையின் நாயகியாக நடிக்கிறார். அவருடன வெற்றி, தனன்யா, ரமேஷ் திலக், ஹரீஷ் பெரடி உள்பட பலர் நடிக்கிறார்கள்.
படம் பற்றி இயக்குனர் ஷியாம் பர்வீன் கூறியதாவது: வெற்றி, 'ஜீவி' படத்தில் நடிக்கும் முன்பே இந்த படத்திற்கு அவரை ஒப்பந்தம் செய்து விட்டோம். கொரோனா காலத்தால் சற்று தாமதமாகி விட்டது. கொரோனா காலத்துக்கு முன்பு வரை மலையாள சினிமா ஒரு சில குறிப்பிட்ட ஹீரோக்களை சுற்றித்தான் இருந்தது. புதுமுகங்களின் படங்களுக்கு வியாபாரம் இல்லாமல் இருந்தது. தற்போது ஓடிடி தளத்தின் வருகைக்கு பிறகு இந்த நிலை மாறிவிட்டது.
இதன் காரணமாக மலையாள இயக்குனர்களுக்கு தமிழ் படம் இயக்க வேண்டும் என்கிற ஆர்வம் இருக்கும். காரணம் இங்கு புதியவர்களின் சினிமாவுக்கும் வரவேற்பு கிடைக்கும். அந்த வகையில்தான் இந்த படம் தொடங்கப்பட்டது. தற்போது எல்லா பணிகளும் முடிந்து வருகிற 10ம் தேதி படம் வெளிவருகிறது.
சினிமா இயக்குனராக துடிக்கும் ஒரு இளைஞனுக்கு திடீரென தனது நினைவுகள் மறந்து விடுகிறது. தன்னை யார் என்றே அவனுக்கு தெரியவில்லை. இந்த நிலையில் அவன் மீது சில கொலை பழிகள் சுமத்தப்படுகிறது. அவற்றில் இருந்து அவன் எப்படி மீண்டு வருகிறான் என்பதுதான் படத்தின் கதை. என்றார்.