நான் கார்த்தியின் தீவிர ரசிகை : கிர்த்தி ஷெட்டி | இன்னும் 50 நாள் : பராசக்தி புதிய போஸ்டர் வெளியீடு | ஆர்யன் படம் வருகிற 28-ல் நெட்பிளிக்சில் வெளியாகிறது | ஜாய் கிறிஸ்டில்லாவுக்கு எதிராக மாதம்பட்டி ரங்கராஜ் தொடுத்த வழக்கை தள்ளுபடி செய்த நீதிமன்றம் | சிம்பு கதையில் ரஜினியா... | ஆண் பாவத்திற்கு பொல்லாதது பின் தமிழ் சினிமா நிலைமை பாவம் | அது நானில்லை : ரகுல் ப்ரீத் சிங் எச்சரிக்கை | தன் பட பூஜையை அர்ஜூன் தாஸ் புறக்கணித்தாரா? | தமிழில் மெலோடி பாடல்கள் குறைந்தது ஏன்?: கங்கை அமரன் | ஹிந்தியில் மீண்டும் தடம் பதிப்பாரா தனுஷ்? |

சர்தார், காரி, ரன் பேபி ரன் உள்ளிட்ட படங்களை தயாரித்த பிரின்ஸ் பிக்சர்ஸ் தயாரிப்பில் உருவாக இருக்கும் லப்பர் பந்து என்கிற படத்தில் ஹரிஷ் கல்யாண், அட்டகத்தி தினேஷ் இருவரும் இணைந்து நடிக்கின்றனர். கிராமத்து கிரிக்கெட் விளையாட்டை மையப்படுத்தி உருவாகும் இந்த படத்தின் இரண்டு கதாநாயகிகளில் ஒருவராக மலையாள நடிகை சுவாசிகா விஜய் நடிக்கிறார். மலையாள திரையுலகில் தற்போது பல படங்களில் பிஸியாக நடித்து வரும் சுவாசிகா தமிழுக்கு ஒன்றும் புதியவர் அல்ல. சொல்லப்போனால் இவர் சினிமாவில் அறிமுகமானதே வைகை என்கிற தமிழ்ப்படத்தில் தான்.
கடந்த 2009ல் வெளியான அந்த படத்தில் விசாகா என்கிற பெயரில் தான் அறிமுகமானார். அதைத்தொடர்ந்து சாட்டை படத்தில் சமுத்திரக்கனியின் மனைவியாக நடித்திருந்த இவர் அதன்பிறகு பெரும்பாலும் தமிழில் அடையாளம் தெரியாமல் வந்துபோன சில படங்களில் தான் நடித்துள்ளார். அதேசமயம் மலையாளத்தில் சில படங்களில் கதாநாயகியாகவும் சில படங்களில் குணச்சித்திர கதாபாத்திரங்களிலும் தற்போது பிஸியாக நடித்து வருகிறார். கடந்த வருடத்தில் மட்டும் ஒன்பது படங்களில் நடித்துள்ளார். அவற்றில் மோகன்லால், மம்முட்டி, திலீப் ஆகிய முன்னணி நடிகர்களின் படங்களும் உண்டு.
குறிப்பாக கடந்த வருடம் மோகன்லால் நடிப்பில் வெளியான ஆராட்டு திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்த ஷ்ரத்தா ஸ்ரீநாத்தை விட அந்த படத்தில் சுவாசிகாவுக்கு தான் அதிக முக்கியத்துவமும் காட்சிகளும் கொடுக்கப்பட்டிருந்தன. இந்த நிலையில் 5 வருடங்களுக்கு பிறகு மீண்டும் தமிழில் ஒரு பெரிய நிறுவனத்தின் தயாரிப்பில் ஓரளவுக்கு பிரபலமான ஹீரோவுக்கு ஜோடியாக நடிப்பதன் மூலம் மீண்டும் வெளிச்சம் பெற்றுள்ளார் சுவாசிகா.