நேரடியாக ஓடிடியில் வெளியாகும் கீர்த்தி சுரேஷ் படம் | 22 ஆண்டு காத்திருப்பு : விஷ்ணு மஞ்சு நெகிழ்ச்சி | யாருக்கு யார் வில்லன்? மோகன்லால் மோகன்பாபு போட்டாபோட்டி | மருத்துவர்களின் அலட்சியத்தால் செல்லப்பூனை மரணம் ; திலீப் பட இயக்குனர் போலீசில் புகார் | லண்டனில் கங்குலியுடன் சந்திப்பு ; பிரமித்து விலகாத நவ்யா நாயர் | குபேராவை கேரளாவில் வெளியிடும் துல்கர் சல்மான் | 'தொடரும்' படத்தின் கதை என்னுடையது ; வில்லங்க இயக்குனரின் புதிய சர்ச்சை | 'தி ராஜா சாப்' டீசர் : ஹிந்தி, தெலுங்கு பார்வைகளில் போட்டி | மைனா நந்தினியின் 'குட் டே' | உறுப்பினர் அட்டை இல்லாமல் சினிமாவில் நடிக்க முடியாது : விஷால் அறிக்கை |
மலையாள திரையுலகில் சமீப நாட்களாக குறைந்த பட்ஜெட்டில் படம் எடுத்து 50 முதல் 100 கோடிகளை அசால்ட்டாக அள்ளி வருகிறார்கள். அதுமட்டுமல்ல அந்த படத்தின் இயக்குனர்களுக்கு அடுத்து மிகப்பெரிய ஹீரோக்களின் படங்களை இயக்கும் வாய்ப்பும் தானாக தேடி வருகிறது. அந்த வகையில் கடந்த பிப்ரவரி 3ஆம் தேதி வெளியான ரோமாஞ்சம் என்கிற திரைப்படம் ஐந்து கோடி பட்ஜெட்டில் உருவாகி இப்போது வரை 50 கோடிக்கு மேல் வசூலித்துள்ளது. இந்த படத்தை இயக்குனர் ஜித்து மாதவன் என்பவர் இயக்கியுள்ளார். பெரிய அளவில் பிரபலமில்லாத நடிகர்களை வைத்து ஹாரர் கலந்த காமெடி படமாக இந்த படத்தை உருவாக்கி ஹிட் ஆக்கியுள்ளார்.
இதைத் தொடர்ந்து இவருக்கு அடுத்ததாக நடிகர் பஹத் பாஸில் நடிக்கும் படத்தை இயக்கும் வாய்ப்பு கிடைத்துள்ளது. இந்த படம் மார்ச் மாதமே துவங்கப்பட்டு வரும் ஓணம் பண்டிகை ரிலீஸாக வெளியாகும் என்றும் சொல்லப்படுகிறது.
இதே போல கடந்த வருடம் மலையாளத்தில் வெளியாகி சூப்பர் ஹிட்டான ஜெய ஜெய ஜெய ஹே என்கிற படமும் இதே பாணியில் 50 கோடிக்கு மேல் வசூலித்து சூப்பர் ஹிட் ஆனது. தற்போது அந்த படத்தின் இயக்குனர் விபின் தாஸ் மீண்டும் அதே ஹீரோவை வைத்து இயக்கும் புதிய படத்தில் நடிகர் பிரித்விராஜ் தானே முன்வந்து வில்லன் கதாபாத்திரத்தில் நடிப்பதற்கு ஒப்புக் கொண்டுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.