திடீர் இயக்குனரான ஜோதி கிருஷ்ணா | ஒரு நொடி இயக்குனருக்கு கார் பரிசளித்த தயாரிப்பாளர் | 22 ஆண்டுகளுக்கு பிறகு படம் இயக்கிய கே.ரங்கராஜ் | கொளுத்தும் வெயிலில் காத்திருந்த சிறுவர்கள் ஏமாற்றம் : மன்னிப்பு கேட்ட பிரபுதேவா | சினிமா பற்றி சினிமா எடுத்தால் ஓடாதா? : கவின் ஆதங்கம் | சூர்யாவின் கங்குவா குறித்து ஜோதிகா வெளியிட்ட தகவல் | மே 10ல் அஜித் இல்லாமல் தொடங்கும் குட் பேட் அக்லி படப்பிடிப்பு | முதலாவது 4ம் பாகத் திரைப்படம் - அசத்துமா அரண்மனை 4? | விரைவில் 'பாகுபலி' அனிமேஷன் சீரிஸ் | 'சங்கமித்ரா' படம் உருவாகும், சுந்தர் சி நம்பிக்கை |
ஆர்ஆர்ஆர் படத்தை அடுத்து ராஜமவுலி இயக்கும் புதிய படத்தில் மகேஷ்பாபு நாயகனாக நடிக்கப் போகிறார். ஆப்பிரிக்க காடுகளில் நடைபெறும் கதைக்களத்தை மையமாகக் கொண்ட இந்த படத்திற்கும் ராஜமவுலியின் தந்தையான விஜயேந்திர பிரசாத்தே கதை எழுதி உள்ளார். இந்த படத்தில் மகேஷ்பாபு உடன் நடிக்கப் போகும் நடிகர்- நடிகைகளை ஒப்பந்தம் செய்யும் பணிகள் நடக்கின்றன. ஆர்ஆர்ஆர் படத்தின் ஆஸ்கர் பணியில் உள்ள ராஜமவுலி அது முடிந்ததும் இந்த படத்தின் படப்பிடிப்பை தொடங்கவும் திட்டமிட்டு இருக்கிறார்.
இந்தபடத்திற்கு முன்பாக திரிவிக்ரம் இயக்கும் படத்தில் நடிக்க உள்ளார் மகேஷ்பாபு. ஏற்கனவே ஒருக்கட்ட படப்பிடிப்பு முடிந்துள்ளது. விரைவில் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு துவங்க உள்ளது. இப்படத்திற்காக தன்னை தயார்படுத்தி வரும் மகேஷ் பாபு, தற்போது தனது உடல் எடையை குறைத்து பிட்டாக மாறிக் கொண்டிருக்கிறார் . அதற்காக அவர் ஜிம்மில் தீவிரமான பயிற்சியில் ஈடுபட்டுள்ளார். அது குறித்த புகைப்படம் ஒன்றை வெளியிட்டு இருக்கிறார் மகேஷ் பாபு.