ஜுன் 20ல் மும்முனைப் போட்டி | அதிக நேரம் ஓடும் படங்களில் 5வது இடம் பிடித்த 'குபேரா' | விஜய் சேதுபதி - பூரி ஜெகன்னாத் படத்திற்கு ஹிந்தியில் தலைப்பு? | நேரடியாக ஓடிடியில் வெளியாகும் கீர்த்தி சுரேஷ் படம் | 22 ஆண்டு காத்திருப்பு : விஷ்ணு மஞ்சு நெகிழ்ச்சி | யாருக்கு யார் வில்லன்? மோகன்லால் மோகன்பாபு போட்டாபோட்டி | மருத்துவர்களின் அலட்சியத்தால் செல்லப்பூனை மரணம் ; திலீப் பட இயக்குனர் போலீசில் புகார் | லண்டனில் கங்குலியுடன் சந்திப்பு ; பிரமித்து விலகாத நவ்யா நாயர் | குபேராவை கேரளாவில் வெளியிடும் துல்கர் சல்மான் | 'தொடரும்' படத்தின் கதை என்னுடையது ; வில்லங்க இயக்குனரின் புதிய சர்ச்சை |
மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்புத்துறை அமைச்சர் அனுராக் தாக்கூர் அரசு முறை பயணமாக தெலுங்கானா மற்றும் ஆந்திர மாநிலங்களில் சுற்றுப்பயணம் செய்தார். அப்போது அவர் ஐதராபாத்தில் உள்ள சிரஞ்சீவியின் வீட்டுக்கு சென்றார்.
இந்த சந்திப்பின் போது இந்திய திரைப்படத்துறையின் வளர்ச்சி, எதிர்காலம் குறித்தும், தெலுங்கு சினிமாவின் அசுர வளர்ச்சி குறித்தும் பேசினார்கள். இந்த சந்திப்பு சுமார் 20 நிமிடம் நடந்தது. இந்த சந்திப்பின்போது மற்றொரு தெலுங்கு முன்னணி ஹீரோவானா நாகார்ஜுனா, தயாரிப்பாளர் அல்லு அரவிந்த் ஆகியோரும் உடன் இருந்தனர். அமைச்சருக்கு சிரஞ்சீவி, விநாயகர் சிலையை பரிசளித்தார். மத்திய அமைச்சர், சிரஞ்சீவியை அவரது வீட்டுக்கே சென்று சந்தித்தது ஆந்திர அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை கிளப்பி உள்ளது.
இந்து சந்திப்பு குறித்து சிரஞ்சீவி தனது டுவிட்டரில் “ஐதராபாத் வருகையின் போது எனது வீட்டிற்கு வர நேரம் ஒதுக்கிய அமைச்சர் அனுராக் தாக்கூருக்கு நன்றிகள். இந்தியத் திரைப்படத் துறை மற்றும் அதன் வேகமான முன்னேற்றம் குறித்து எனது சகோதரர் நாகார்ஜூனாவுடன் சேர்ந்து நடத்திய மகிழ்ச்சிகரமான விவாதம் மிகவும் பிடித்திருந்தது” என பதிவிட்டுள்ளார்.