மோகன்லாலின் ஹிருதயபூர்வம் படத்துக்கு யு சான்றிதழ் | ‛காஞ்சனா 4' படத்திற்கு பிறகு தமிழ் சினிமாவில் என்னை தேடுவார்கள் : நோரா பதேஹி | ‛கஜினி' சிக்ஸ்பேக்கிற்கு அஜித் தான் காரணம் : ஏ.ஆர்.முருகதாஸ் தகவல் | சன்னி லியோன் நடித்த படத்தின் மூன்றாம் பாகத்தில் தமன்னா | ஜனநாயகன் இசை விழாவில் கலந்து கொள்ள ரஜினி, கமலுக்கு அழைப்பா? | '18 மைல்ஸ் தாரணா' : ‛பேச்சுலர்' இயக்குனரின் அடுத்த பட அப்டேட் | ராஜமவுலி, மகேஷ்பாபு படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிடும் ஜேம்ஸ் கேமரூன் | ‛ஆந்திரா கிங் தாலுக்' படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு! | விநாயகர் சதுர்த்தி படங்கள் வருவது சந்தேகம்? | 'மெட்ராஸ் மேட்னி' குழுவினரை அழைத்துப் பாராட்டிய சிவகார்த்திகேயன் |
மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்புத்துறை அமைச்சர் அனுராக் தாக்கூர் அரசு முறை பயணமாக தெலுங்கானா மற்றும் ஆந்திர மாநிலங்களில் சுற்றுப்பயணம் செய்தார். அப்போது அவர் ஐதராபாத்தில் உள்ள சிரஞ்சீவியின் வீட்டுக்கு சென்றார்.
இந்த சந்திப்பின் போது இந்திய திரைப்படத்துறையின் வளர்ச்சி, எதிர்காலம் குறித்தும், தெலுங்கு சினிமாவின் அசுர வளர்ச்சி குறித்தும் பேசினார்கள். இந்த சந்திப்பு சுமார் 20 நிமிடம் நடந்தது. இந்த சந்திப்பின்போது மற்றொரு தெலுங்கு முன்னணி ஹீரோவானா நாகார்ஜுனா, தயாரிப்பாளர் அல்லு அரவிந்த் ஆகியோரும் உடன் இருந்தனர். அமைச்சருக்கு சிரஞ்சீவி, விநாயகர் சிலையை பரிசளித்தார். மத்திய அமைச்சர், சிரஞ்சீவியை அவரது வீட்டுக்கே சென்று சந்தித்தது ஆந்திர அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை கிளப்பி உள்ளது.
இந்து சந்திப்பு குறித்து சிரஞ்சீவி தனது டுவிட்டரில் “ஐதராபாத் வருகையின் போது எனது வீட்டிற்கு வர நேரம் ஒதுக்கிய அமைச்சர் அனுராக் தாக்கூருக்கு நன்றிகள். இந்தியத் திரைப்படத் துறை மற்றும் அதன் வேகமான முன்னேற்றம் குறித்து எனது சகோதரர் நாகார்ஜூனாவுடன் சேர்ந்து நடத்திய மகிழ்ச்சிகரமான விவாதம் மிகவும் பிடித்திருந்தது” என பதிவிட்டுள்ளார்.