சூப்பர் குட் சுப்பிரமணி காலமானார் | பிரதீப் ரங்கநாதனின் டுயூட் தீபாவளிக்கு வருகிறது | 'எல் 2 எம்புரான்'ஐ ஓவர்டேக் செய்த 'தொடரும்' | மே 9 படங்களின் வரவேற்பு நிலவரம் என்ன? | தேசிய பாதுகாப்பிற்கு நிதி வழங்கும் இளையராஜா | சசிகுமாரின் ப்ரீடம் ஜூலை 10ம் தேதி ரிலீஸ் | விஜய் தேவரகொண்டாவின் 36வது பிறந்தநாள் : வைரலாகும் ராஷ்மிகாவின் வாழ்த்து | விஜய் மகன் ஜேசன் சஞ்சய் தொடங்கிய புதிய தயாரிப்பு நிறுவனம் | ஜெயிலர் 2வில் போலீஸ் வேடத்தில் பாலகிருஷ்ணா | கல்வி தான் ஏணிப்படி... எங்க குடும்பத்தின் முதல் பட்டதாரி ஆகப் போறான் : மகன் குறித்து முத்துகாளை உருக்கம் |
துல்கர் சல்மான் தற்போது மலையாளத்தில் கேங்ஸ்டர் படமாக உருவாகி வரும் கிங் ஆப் கோத என்கிற படத்தில் நடித்து வருகிறார். மலையாள திரையுலகின் பிரபல சீனியர் இயக்குனரான ஜோஷியின் மகன் அபிலாஷ் ஜோஷி இந்த படத்தை இயக்குவதன் மூலம் இயக்குனராக அறிமுகமாகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு தற்போது கேரளாவில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் மலையாள இளம் முன்னணி நடிகர்களில் ஒருவரான டொவினோ தாமஸ் கிங் ஆப் கோத படப்பிடிப்பிற்கு விசிட் அடித்துள்ளார். இது குறித்த புகைப்படம் ஒன்று சோசியல் மீடியாவில் வெளியாகி உள்ளது.
அதே சமயம் சில மாதங்களுக்கு முன்பு ஒரு முறை இதேபோல இந்த படத்தின் படப்பிடிப்பிற்கு வருகை தந்தார் டொவினோ தாமஸ். தற்போது மீண்டும் அவர் இந்த படப்பிடிப்பு தளத்திற்கு வந்திருப்பதை பார்க்கும்போது இந்த படத்தில் அவரும் ஒரு சிறப்பு தோற்றத்தில் நடிக்கிறாரோ என்கிற யூகங்கள் சோசியல் மீடியாவில் கிளம்பியுள்ளன. ஏற்கனவே இரண்டு வருடங்களுக்கு முன்பு துல்கர் சல்மான் நடிப்பில் வெளியான குறூப் என்கிற படத்திலும் சில நிமிடங்களே வந்து செல்லும் கதாபாத்திரத்தில் டொவினோ தாமஸ் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.