நான் கார்த்தியின் தீவிர ரசிகை : கிர்த்தி ஷெட்டி | இன்னும் 50 நாள் : பராசக்தி புதிய போஸ்டர் வெளியீடு | ஆர்யன் படம் வருகிற 28-ல் நெட்பிளிக்சில் வெளியாகிறது | ஜாய் கிறிஸ்டில்லாவுக்கு எதிராக மாதம்பட்டி ரங்கராஜ் தொடுத்த வழக்கை தள்ளுபடி செய்த நீதிமன்றம் | சிம்பு கதையில் ரஜினியா... | ஆண் பாவத்திற்கு பொல்லாதது பின் தமிழ் சினிமா நிலைமை பாவம் | அது நானில்லை : ரகுல் ப்ரீத் சிங் எச்சரிக்கை | தன் பட பூஜையை அர்ஜூன் தாஸ் புறக்கணித்தாரா? | தமிழில் மெலோடி பாடல்கள் குறைந்தது ஏன்?: கங்கை அமரன் | ஹிந்தியில் மீண்டும் தடம் பதிப்பாரா தனுஷ்? |

மலையாள நடிகை ஸ்வேதா மேனன் தற்போது 'பள்ளிமணி' என்ற மலையாளப் படத்தில் நடித்துள்ளார். இது ஒரு ஹாரர் த்ரில்லர் படம். இந்த படத்தின் போஸ்டர் கேரளா முழுவதும் ஒட்டப்பட்டுள்ளது. இதில் பல ஊர்களில் இந்த போ-ஸ்டரில் இடம்பெற்றிருந்த ஸ்வேதா மேனனின் படத்தை மட்டும் யாரோ கிழித்து எறிந்துள்ளனர்.
இந்த படத்தை தனது சோசியல் மீடியா பக்கத்தில் வெளியிட்டு ஸ்வேதா மேனன் எழுதியிருப்பதாவது: இது விஷமத்தனமான வேலையாக இருக்கிறது. என்றை புறக்கணிக்க பார்க்கிறார்கள். யார் செய்திருந்தாலும் இது கோழைத்தனமான செயல், துணிச்சல் இருந்தால் என் முன்னால் வந்து இதனை செய்யட்டும் அதற்கு அவர்களிடம் தைரியம் இருக்காது. அதனால்தான் அவர்களை கோழை என்று சொல்கிறேன். இந்த படம் ஒரு இளம் இயக்குனரின் பல வருட கனவு அதை சிதைக்காதீர்கள். இவ்வாறு அவர் எழுதியிருக்கிறார்.