முதல் பாடல் மே 22ல், படம் ரிலீஸ் ஜூலை 12ல்: ஒரே போஸ்டரில் இரண்டு அப்டேட் வெளியிட்ட 'இந்தியன்-2' படக்குழு | ‛படையப்பா' ரீ-ரிலீஸாகிறது : ரஜினியை சந்தித்து பேசிய பிஎல் தேனப்பன் | அஜித்தின் ‛குட் பேட் அக்லி' முதல் பார்வை வெளியீடு - எதிர்பாராததை எதிர்பாருங்கள் | விஜய், தனுஷை தொடர்ந்து சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாகும் ராஷ்மிகா | தீபாவளியை குறிவைக்கும் கங்குவா படக்குழு | ஸ்ரீ கணேஷ் இயக்கத்தில் சித்தார்த் | ராஜமவுலி - மகேஷ்பாபு பட தயாரிப்பு நிறுவனம் வெளியிட்ட திடீர் அறிவிப்பு | வளரும் நடிகர் பட்டியலில் இணைந்த கவின் | மிஸ்டர் அண்ட் மிஸஸ் படத்தில் ஜோடி சேரும் ராபர்ட் மாஸ்டர் - வனிதா விஜயகுமார் | ஆரம்பமே ஹீரோயின் : அசத்தும் தேஜூ அஸ்வினி |
டப்பிங் ஆர்ட்டிஸ்டாக இருந்து ஒரு கிடாயின் கருணை மனு படத்தின் மூலம் நடிகை ஆனவர் ரவீணா ரவி. அதற்பிறகு காவல்துறை உங்கள் நண்பன், ராக்கி, வீரமே வாகை சூடும் படங்களில் நடித்தார். கடைசியாக லவ் டுடே படத்தில் பிரதீப் ரங்கநாதனின் சகோதரியாக நடித்திருந்தார். தற்போது மாமன்னன் படத்தில் நடித்து வரும் அவர் அடுத்ததாக நடிக்கும் படம் 'வட்டார வழக்கு'.
ஒரு கிடாயின் கருணை மனு படத்திற்கு பிறகு மீண்டும் அவர் நடிக்கும் கிராமத்து படம் இது. இந்த படத்தில் சந்தோஷ் நம்பிராஜன் கதைநாயகனாக நடிக்கிறார். இவர்கள் தவிர விஜய் சத்யா, வெங்கடேஷ், விசித்திரன் உள்பட பலர் நடிக்கிறார்கள். கண்ணுச்சாமி ராமச்சந்திரன் தயாரித்து இயக்குகிறார். “இந்த படம் 1962, மற்றும் 1985 காலகட்டங்களில் நடக்கும் கதை. சொத்து பிரச்சினை காரணமாக பங்காளிகள் மோதிக் கொள்வதும், பின்பு கூடிக்கொள்வதுதமான கதை. அன்றைய கிராமத்து வாழ்க்கையை பதிவு செய்யும் வகையில் படமாகி வருகிறது” என்கிறார் இயக்குனர் கண்ணுச்சாமி ராமசந்திரன்.